அண்ணாதிமுக என்பது ஒரு திராவிட கட்சி .இரட்டை குழல் துப்பாக்கியாக நாங்கள் கொள்கைகளில் பயணிப்போம் !!

திமுக எதிர்ப்பு என்பது எம்.ஜி.ஆர் அவர்கள் 1977ல் ஆட்சி அமைந்த உடனே சட்டமன்றத்தில் கூறினார்.அதாவது அண்ணாதிமுக என்பது ஒரு திராவிட கட்சி .இரட்டை குழல் துப்பாக்கியாக நாங்கள் கொள்கைகளில் பயணிப்போம். ஆனால் திமுகவில் இருந்து அண்ணாதிமுக எங்கு வேறுபடுகிறது என்றால் லஞ்சம்,ஊழல் ,குடும்பஅரசியல், மாவட்டத்திற்கு மாவட்டம் அந்த குறுநில மன்னர்கள் .பொதுக்குழுவால் முடிவெடுத்தால் அது திமுக,தொண்டர்களினால் ஒரு தலைமையை உருவாக்கப்பட்டால் அது அண்ணாதிமுக அதாவது எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்புவது என்னவென்றால் சாதிக்அலி வழக்கில் தன்கிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிக சட்டமன்றஉறுப்பினர்கள் இருக்கின்றனர்,அதனால் இரட்டைஇலை சின்னம் அவருக்கு வந்துவிடும்.எனவே கட்சி ஒரு பிளவை சந்திக்க வேண்டும்,ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட வேண்டும், இவர் தலைமையில் அண்ணாதிமுக மற்றும் இரட்டைஇலை சின்னம் வந்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கின்றார்.ஆனால் அந்த சிவசேனா வழக்கில் அதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பாமல் constitutional bench கொண்டு சென்றனர்.அது பலஆண்டுகள் காலம் எடுக்கும். அதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது இணைந்து பணியாற்றுவதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமையும். மேலும் எடப்பாடி & ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனக்காக வாதிடுகிறார். ஒன்றரை கோடி தொண்டர்களுக்காகவோ, தொண்டர்களின் பிரிதிநிதியாக அவர் வாதிடவில்லை. ராம்குமார் ஆதித்யன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோரின் ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் விளம்பரம் கொடுத்து ,இந்த இரண்டு பெரும் ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிநிதிகளாக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், அதில் திரு.ஓ.பன்னீர்செல்வமும் அடக்கம், எடப்பாடி பழனிசாமியும் அடக்கம், இதுபோல பல லட்சக்கணக்கான பேர் தொடர்புடைய வழக்கில் தனித்தனியாக வழக்கு போடக்கூடாது. இந்த representative suit ல் ஒரு வழக்கு வந்துவிட்டால்,யார் போட்டாலும் இந்த representative suitல் தான் இருக்க வேண்டுமே ஒழிய அதை தாண்டி போக முடியாது.

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: