ஆ. ராசாவின் 15 சொத்துகளை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!


திமுக எம்பி ஆ ராசாவின் சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆ ராசாவின் பினாமி நிறுவனம் எனக்கூறி அதன் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி கையகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் திமுக எம்பி ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆ ராசாவின் பினாமி நிறுவனமான கருதப்படும் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது. இந்த சொத்துகள் அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருக்கிறது. ஆ ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் சோதனை நடத்தியது.

கோவை மாவட்டத்தில் ஆ ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அதாவது ஆ ராசா மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க வேண்டி பணம் வாங்கியதாகவும்,தனை அவர் பினாமி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: