எடப்பாடி பழனிசாமி அவர்களின் கவர்னர் சந்திப்பிலும் அதை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் பொதுவாக ஊழல் குறித்து EPS சொல்கிறாரே ஒழிய எந்தெந்த துறைகளில் எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த வகையில் எவ்வளவு ரூபாய் ஊழல் புரிந்துள்ளார்கள் என்கிற ஆதாரங்களோடு எதையும் அவர் குறிப்பிடவில்லை.
அப்படி குறிப்பிட்டு அதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி CBI ,IT ,ED மூலமாக நடவடிக்கை எடுக்கலாம் .அதை செய்ய eps பயப்படுவது தன் மீது உள்ள ஊழல் வழக்குகளுக்காகவா அல்லது திமுகவிற்கும் EPS க்கும் உள்ள மறைமுக ஒப்பந்தம் வெறுமனே விளம்பரத்திற்காக பல நாட்களாக பேசப்பட்ட கள்ளச்சாராய விற்பனை குறித்து மட்டும் விரிவாக பேசி ஒப்பந்தப்படி நடந்து கொள்கிறாரா ?