மக்கள் மனதில் ஆளுமைமிக்க இயக்கமாக அதிமுக உருவெடுக்க வேண்டும்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என்கிற சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் இந்துத்துவா,திராவிடம் பாஜக vs திமுக என்று அமைக்கப்படுகிறது. அதிமுகவிற்கு இது மிக மிக ஆபத்தானது.

திமுக,பாஜக இரண்டுமே திட்டமிட்டு தமிழக அரசியல் களத்தை இதேபோல் அமைக்கிறார்கள்.இந்த நேரத்தில் அதிமுக நாடாளுமன்ற வெற்றியையும் தமிழகத்தை ஆளுகின்ற வாய்ப்பையும் பெற தன் பலத்தையும் தனித்தன்மையையும் நிரூபிக்க வேண்டும்.

அமைதியாக திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாமல் கொடநாடு கொலை வழக்கில் மூழ்கி இருப்பது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல வலிமையாக களத்தில் மக்கள் மனதில் ஆளுமைமிக்க இயக்கமாக உருவெடுக்க வேண்டும். – கே.சி.பழனிசாமி
Share on: