இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவருமே ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் !!

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவருமே ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் .ஏனென்றால் இன்றைக்கு சின்னம் முடங்கக்கூடிய இடத்துக்கு சென்றதுக்கு இவர்கள் இருவரும் தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இவர்கள் இருவரையும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து  ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் இவர்களை நீக்குவதற்கான வேலையை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் விருப்பமாக பார்க்கப்படுகிறது .எடப்பாடி பழனிசாமி ,கே பி முன்னுசாமி ,தங்கமணி ,வேலுமணி ,சி.வி .ஷண்முகம் ,ஜெயக்குமார் ,ஓ .பன்னீர்செல்வம் ,வைத்தியலிங்கம்,மனோஜ்பாண்டியன் ,பிரபாகரன் ,இன்னும் சில நபர்களை தேர்வு செய்து கட்சியை விட்டு ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு ,மீதம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தலைமையை அடையாளப்படுத்தினால் இந்த அதிமுக கட்சி இன்னும் 1000 வருடத்திற்கு வலிமையான கட்சியாக இருக்கும் .புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் வழியில் அதனை அதிமுக தொண்டர்களும்  ஒருங்கிணைந்து ஒரு தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால் இவர்கள் இருவரும் தானாகவே அமைதியாகிவிடுவார்கள் .இல்லையென்றால் பி ஜே பி உடன் அடிமைப்படுத்துவார்கள் ,திமுக உடன் ஒரு ரகசிய உடன்பாடு செய்து கொள்வார்கள்  .காங்கிரஸ் கட்சி இன்றைக்கு 10 சீட்டுக்கும்  5 சீட்டுக்கும் கையேந்துகிற நிலையில் உள்ளது .இந்த நிலையில் பி ஜே பி உடன் ஒரு கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்டு அதில் கூட்டணியில் அதிமுக கையேந்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள் .அதனால் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: