தற்போதைய அதிமுக தலைமையானது, களத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதன் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!


1997 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி மாநிலம் முழுவதும் அமோக வெற்றி பெற்றது. அப்போதைய திமுக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கு ‘திரைப்பட கவர்ச்சியே காரணம்’ என்றார். ஆனால் சிறிது காலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

நாஞ்சில் கே.மனோகரன் உள்ளிட்ட சில முதல் கட்டத் தலைவர்கள், எம்.ஜி.ஆரை விட்டு திமுகவுக்குச் சென்றபோது, முக்கிய கூட்டணி கட்சிகள் இல்லாமல், பொருளாதார சிக்கலில் இருந்துகொண்டு, எம்.ஜி.ஆர் துணிச்சலுடன் போராடினார். 1980 மே மாதம் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்.

1972-ல் எம்.ஜி.ஆர் உருவாக்கியதை விட இன்றைய அதிமுக ஒரு திடமான அமைப்பையும், தீவிர திமுக எதிர்ப்பு தொகுதியையும் கொண்டுள்ளது.

அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கை மூலம் அமைச்சர் ஒருவரை சிறையில் இருக்கிறார். மற்றொருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளமும், தென் மாவட்டங்களில் பெய்த மழையும் திமுக அரசின் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிடல் இன்மையை காட்டிக் கொடுத்துள்ளது.

இருப்பினும் இதை பயன்படுத்தி களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதிமுகவின் எதிர்க்கட்சி செயல்பாடுகள் அரிதாகவே உணரப்பட்டது. தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி வெறும் சில நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்துவிட்டு சேலம் திரும்பிவிட்டார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் வேண்டிய நேரத்தில் மக்களிடம் சென்றார்கள். திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை கேள்வி எழுப்புவதில் ஜெயலலிதா அவர்கள் சிறந்து விளங்கினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இன்னும் பிரகாசிக்கவில்லை.1980ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, எம்.ஜி.ஆர் விவசாயிகள் சங்கம், கம்யூனிஸ்டுகள் போன்றோரை அணுகினார் அவர்களை தன் பக்கம் இழுத்தார். ஆனால் தற்போதைய அதிமுக தலைமை அனைத்து திமுக எதிர்ப்பு சக்திகளையும் ஒன்று திரட்டி மாற்று அணியை உருவாக்க தவறுகிறது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கட்டி கட்சியை ஒருங்கிணைக்க தவருகிறார் எடப்பாடி பழனிசாமி.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தலைமைக்கு பிறகு இன்று அதிமுக திடமான தொண்டர்பலம் உள்ள அமைப்பாக உள்ளது. ஆனால் அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்கள் இல்லை, எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட அவரோடு பயணித்த அவரது மரபைச் சுமந்து செல்பவர்கள் அதிமுகவை வழிநடத்தினால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்.
Share on: