திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே எதிர்காலம் போற்றும்! “செய்வார்களா”?


தி.மு.க.வின் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 என்பது 2கோடி மகளிருக்கு 5ஆண்டிற்கு சுமார் 1லட்சம் கோடி ஆயினும் பெரியார் புத்தகம் ,தமிழ் சீர்திருத்தம் போன்றவற்றிற்கு 2 முதல் 10 கோடி வரை ஒரு முறை மட்டுமே அறிவித்தால் போதுமானது எனவே அண்ணா அவர்களின் காலத்தில் அரசின் திட்டம் வகுத்தபோதும் புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டம் அறிவித்த பொழுதும் நிதிப் பற்றாக்குறை இருந்தது எனினும் அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
திரு.ஸ்டாலின் அவர்கள் புகழ்பெற்ற திட்டத்தை இன்று அறிவித்ததை அடுத்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நிலையில் ஒரு புகழப்பெற்ற முதலமைச்சராக எதிர்காலத்தில் போற்றப்படுவார் இத்துடன் தாலிக்குத்தங்கம் திட்டத்தையும் 9,10,11,12ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? இதில் தோல்வி ஏற்பட்டால் மீண்டு வருவது கடினம்.EPS மற்றும் OPS இல் யார் சிறந்தவர்கள் என்பதனை தவிர்த்து மேலும் காலத்தில் திமுகவை எதிர்க்க EPS மற்றும் OPS அவர்களை ஒதுக்கிவிட்டு என்போன்றவர்கள் தயாராக உள்ளோம் .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: