பதவி வெறி & அதிகார சண்டையினால் மட்டுமே அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை சிதைத்து கொண்டிருக்கிறார்கள்

          சமீபகாலமாக அதிமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துஇருக்கிறது .இதற்க்கு முக்கியமான காரணம் பதவி வெறி ,அதிகார சண்டை ,நீயா ? நானா ? என்கின்ற போட்டி ,இவைகள் தான் தற்பொழுது அதிமுக வில் நடந்து கொண்டுஇருக்கிறது .இதில் பாதிக்கப்படுகிறவர்கள் அதிமுக தொண்டர்கள்  மட்டுமே .தொண்டர்கள் இல்லாமல் எதுவும் நடக்க இயலாது .ஏனென்றால் தற்பொழுது தொண்டர்களின் மனநிலை ஒன்றாக இல்லை. அதனை ஒருங்கிணைத்து  கொண்டு வர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டனின்  விருப்பம் .இந்த அனைத்து  பிரச்சனைகளுக்கும் காரணம் முதலாவது  கே.பி.முனுசாமி மட்டுமே .அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது .இரண்டாவது ஓ பி எஸ் ,தனது பதவி பறிபோன பின் அம்மாவின் நினைவிடத்தில் தர்ம யுத்தம் என்ற பெயரில்  மற்றுமொரு  பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் .இதேபோல அதிமுக எம் எல் ஏ  கள் அனைவரும் இவர்களின் செயல்களை பார்த்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார்கள் . அனைத்து அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்பது யார் வேண்டுமானாலும் வரட்டும்,அவர்களில் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றை  தலைமையை ஏற்பது தான் சிறந்த முடிவாகும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: