விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய மாநில அரசுகள்?


தமிழக முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மீதான விலை உயர்வு & மானியம் குறித்து மேலும் இதன் வரியை ஜி.எஸ்.டிகுள் கொண்டுவருவது போன்று மக்களுக்குப் பலன் தரும் எந்த ஒரு முடிவுகளும் பிரதமருடனான சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை மேலும் மக்களின்மேல் சுமை சேர்க்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரங்களை இழந்த சாமானிய மக்கள் இன்னும் மீண்டும் வரவில்லை என்பது ஒருபுறம் மற்றொருபுறம் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய மாநில அரசுகள்?
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: