வேலுவுக்கு நிகராக ரெய்டு… அதிமுகவில் அசுர வளர்ச்சி, திமுகவிலும் டாப்!


திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நிகராக நெடுஞ்சாலைத் துறையில் முன்னணி ஒப்பந்ததாரராக உள்ள ‘அருணை வெங்கட்’ என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார். திருவண்ணாமலை அருகே உள்ளள தென் மாத்தூர் கிராமத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான வீடு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அவருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, கரண் கலைக் கல்லூரி, மகளிர் கம்பன் கலை கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளுக்கு நடுவே, திருவண்ணாமலையைச் சேர்ந்த ‘அருணை கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்கள்.. சிறு கட்டுமானம் மற்றும் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தவர் தான் அருணை வெங்கட். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய தலைவர்களின் தொடர்பு கிடைத்ததால் அசுர வளர்ச்சி அடைந்தார்.. அதிமுக ஆட்சியில் முக்கியப் பிரமுகர்களுக்கு நெருக்கமானவராக மாறிய அருணை வெங்கட் அதிமுக ஆட்சியில் மிகப் பெரிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக வளர்ந்தார்.. அதிமுக ஆட்சியை போல், திமுக ஆட்சியிலும் பல கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்துள்ளார். அதிமுகவினரை தாண்டி திமுகவினரும் அருணை வெங்கட்டுக்கு நெருக்கமாகி உள்ளனர். இவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்ததால், எவ வேலுவை சோதிக்க வந்த வருமான வரித்துறை, இவரையும் டார்க்கெட் செய்து சோதனை நடத்தி உள்ளது. அருணை வெங்கட்டிடம் நடத்திய சோதனை குறித்த விவரத்தை வருமான வரித்துறை வெளியிட்டால் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரிய வரும். இதனிடையே அமைச்சர் எவ வேலு ஐடி ரெய்டு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் தான் எங்கெல்லாம் இடம் வாங்கியிருக்கிறேன் எனக் கேட்டு நேர்முக உதவியாளரை கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு நிர்பந்தப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் புகார் தெரிவித்தார். தனது ஓட்டுநரை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் என்றும் கல்லூரியில் கிளார்க்குகள், மருத்துவக் கல்லூரி எச்.ஆர் களை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்கள் என்றும் அமைச்சர் எவ வேலு கூறினார்.
Share on: