தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,அம்மாவை போன்று மக்களை வசீகரிக்கும் தலைவரா?

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,அம்மாவை போன்று மக்களை வசீகரிக்கும் தலைவரா? பாஜக தலைமையிலான கூட்டணியில் தான் அதிமுக ஒரு அங்கம் வகிக்கிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கவில்லை என்றால். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவிக்க வேண்டும். இது போன்ற பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தும் தமிழக பாஜக தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக தனித்து நின்றாலே பாஜக , திமுகவை எதிர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றிபெற முடியும் – கே சி பழனிசாமி
Share on:

மக்களிடையே நம்பிக்கை இல்லாத திமுக ஆட்சியை அகற்றி,பாஜகவையும் எதிர்க்கக்கூடிய ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவோம்

எதிர்க்கட்சிகளின் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்க்கே இந்த Rs 2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு.சாதாரண மக்களுக்கு இந்த பணமதிப்பிழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது .ஆனால் இந்திய பொருளாதாரத்தில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் வெறும் காவல்துறை மீது மட்டும் நடவடிக்கை எடுத்து எந்த பயனும் இல்லை கள்ளச்சாராயம் விற்கப்படுகிற பகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர் முதல் கிளை கழக பொறுப்பாளர் வரை கட்சி மற்றும் அரசாங்க பொறுப்புகளில் இருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்பொழுது செந்தில் பாலாஜி 2 ஆண்டுகால தி.மு.க அரசாங்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். விஷச்சாராய விவகாரம் முடிவதற்குள் மீண்டும் தஞ்சாவூரில் டாஸ்மாக் இல் மது வாங்கி அருந்தி இருவர் பலியாயிருப்பது திமுக அரசின் நிர்வாக சீர்கேடையே காட்டுகிறது மக்களிடையே நம்பிக்கை இல்லாத திமுக ஆட்சியை அகற்றி,பாஜகவையும் எதிர்க்கக்கூடிய ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவோம்
Share on:

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெரும் மத்திய அரசின் முடிவு! மக்களுக்கு உள்ள சாதகம் பாதகம் என்ன?

2,000 ரூபாய்த் தாளை மாற்ற வரும் ஒவ்வொருவரிடமும் ஆதார் அட்டையும், பான் அட்டையும் (PAN Card) வங்கியில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். அவற்றின் பிரதியை, மூலத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்த்த பின், வங்கியில் வைத்துக் கொள்வார்கள்.

தங்கள் வங்கிக் கணக்கில் பணமாகக் கட்டுபவர்களுடைய ஜாதகம் வங்கியில் ஏற்கனவே இருக்கும். உதாரணமாக, ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) என்கிற விதியின் படி, வங்கிக் கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

அடுத்தாக, ஒருவர் மாற்றுகிற 2,000 ரூபாய்த் தாளின் கூட்டு மதிப்பு (Cumulative Value) ரூ.50,000-ஐத் தாண்டினாலோ, கணக்கில் செலுத்தும் தொகையின் கூட்டு மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினாலோ, அவர்களுடைய விவரங்கள் வருமானவரித் துறைக்கு வங்கிகளின் கணினி வலைப்பின்னல் வாயிலாகத் தானாகவே போய்ச் சேர்ந்து விடும்.

உடனே களத்தில் இறங்கும் வருமானவரித் துறை அதிகாரிகள், பரிசீலனையில் இருக்கும் நபர்களின் கடந்த 3…

Share on:

Continue Reading

“அதிமுக என்ற பேரியக்கத்துக்கே பெரிய ஆபத்து!”

அதிமுக என்றாலே அது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் கட்சியாக தான் எம்.ஜி.ஆர்., அம்மா காலத்தில் இருந்தது. அம்மாவின் மறைவுக்குப்பிறகு, சாத்திய பாகுபாடு அதிகரித்தது. தற்போது எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையிலான மோதலால் ரொம்பவே அதிகமாகியிருக்கிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் – தினகரன்சந்திப்புக்கு பின்னர் அதிமுகவில் சாதியப் பாகுபாடு பூதாகரமாகிவிட்டது.

திராவிடக் நிலை மாறி கட்சி சசிகலா,பன்னீர்,தினகரன்,வைத்திலிங்கம் என ஒரு அணியாகவும் எடப்பாடி,வேலுமணி,தங்கமணி என இன்னொரு அணியாகவும் எதிரெதிராகவே நிற்கிறார்கள். இவர்கள் இப்படி சாதிரீதியாக அடித்துக்கொள்வதால், கட்சிக்கு அப்பாற்பட்ட பலரும் அதில் சேர்ந்துகொள்கிறார்கள். இதை அதிமுக-வின் தொண்டர்களும் வாக்காளர்களும் துளியும் விரும்பவில்லை. இது எடப்பாடிக்கும் பண்ணீருக்கும் ஏன் அதிமுக என்ற பெரியக்கத்திற்குமே பெரிய ஆபத்தாக முடியும்!
Share on:

எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள்!

கர்நாடகத்தில் பாஜகவை EPS-ம் OPS-ம் விழுந்து விழுந்து கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள் .தேர்தலை முன்னின்று நடத்தினார் அண்ணாமலை .தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தேர்தலில் போட்டியிட்டார்.,

இவர்கள் அனைவரும் ஒருசேர தோற்று பாஜக ஆட்சி கர்நாடகத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. .தமிழகத்திலும் EPS, OPS இல்லாத, பாஜக கூட்டணி இல்லாத சாதி, மதம், லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட தொண்டர்களால் உருவாக்கப்படும் தலைமையால் வழிநடத்தப்படும் அதிமுகவிற்கும்,திமுக கூட்டணிக்கும் நாடாளுமன்ற தேர்தல் போட்டியாக அமையும் .அதில் அதிமுக நிச்சயம் நாற்பதையும் வென்றெடுக்கும்.

தொண்டர்களால் தலைமை என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் விதியை அழிக்க துணை நின்ற பா.ஜ.க அழித்த EPS, OPS அனைவருக்கும் எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் .

Share on:

Continue Reading

இபிஎஸ்-ன் சாதி பூசலும் பாஜக வின் மத சாயமும் அதிமுக-விற்கு எதிரானவை!

சாதி, சமய பாகுபாடின்றி நலிந்தவர்களையும் பெண்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது திராவிட சித்தாந்தம். இயற்கையை அழிக்கும் எந்த நாடும் மாநிலமும் முன்னேறியதில்லை. இதன் மூலம் தான் தமிழகம் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் வருவதற்கு 75 ஆண்டுக்கு முன்பே இந்த இலக்குகள் திராவிட மேன் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை. அதிமுக எந்த கட்சி கூட நட்பு கொண்டாலும் இதன் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

மற்ற மக்களை பிரித்தாள நினைக்கும் இபிஎஸ்-ன் சாதி பூசலும் பாஜக வின் மத சாயமும் அதிமுக-விற்கு எதிரானவை.

அதிலும் பாஜக என்பது கொடிய விஷம். குடும்பம் முதல் தேசம் வரை உள்ளுக்குள்ளவே கலகம் மூட்டுவதில் தேர்ந்தவர்கள். இவர்கள் கொள்கைகள் பல தரப்பிலும் ஒருவருக்கொருவர் பகைமையை தூண்டும். மத வெறி, சாதி வெறி, பணக்காரர் சார்பு, பணம் சுருட்டும் உத்திகள், இயற்கை சூழல் அழிப்பு, நவீன அவுட் சோர்ஸ் டிஜிட்டல் ஊழல், ஜனநாயக…

Share on:

Continue Reading

அதிமுகவை கைப்பற்றினால் மட்டும் போதும் என்று நினைக்கிறாரா எடப்பாடி?



1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது.வெறும் 4 எம்.எல்.ஏகள் மட்டும் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை இருப்பினும் திமுக அரசுக்கு எதிராக மிக வலுவான எதிர்க்கட்சி அரசியலை செய்து கொண்டுவந்தார் ஜெயலலிதா. ஆனால் தற்பொழுது 62 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவி பெறுவதில் மட்டுமே ஆர்வம் கட்டிய எடப்பாடி,தன்மீதும் தன் சகாக்கள் மீதும் வழக்குகளுக்கு பயந்துகொண்டு சரியான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை.அதனால் தமிழக அரசியல் களம் திமுக VS பாஜக என்று அமைகிறது.அதிமுக அதன் தனித்தன்மையை இழக்கிறது .அதிமுக தொண்டர்கள் விழிப்படைய வேண்டிய நேரம் இது.

திமுகவின் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அமைச்சரவை மாறி உள்ளது. கர்நாடகா தேர்தலின் முடிவுகள் தென்னிந்திய அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது.இதை எல்லாம் விட்டுவிட்டு 3 நாட்களுக்கு முன்பு நடந்த ஓ பி எஸ், தினகரன் சந்திப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் @EPSTamilNadu. இவர் மீண்டும் ஆட்சி அமைக்க நினைக்கிறாரா? அல்லது அதிமுகவை கைப்பற்றினால் மட்டும் போதும் என்று நினைக்கிறாரா?
Share on:

திமுகவை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பயப்படுவதற்கு காரணம்!


திமுகவை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பயப்படுவதற்கு காரணம் அவர்கள் செய்த குற்றங்கள் தான் என்கிறார் அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன்.எப்போதெல்லாம் திமுக அரசை விமர்சிக்க நினைக்கிறார்களோ , அப்பொழுது அவர்கள் செய்த குற்றங்களான ஊழல்,ரெய்டு போன்றவற்றை கையிலெடுக்கிறார்,ஸ்டாலின் .சட்டசபையில் கொடநாடு வழக்கு என்று பேசியபோது எடப்பாடி வெளியேறியதால் அவரை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ களும் வெளிநடப்பு செய்தார்கள் .இதே போன்று இருக்கை பிரச்சனைக்காக மட்டும் எட்டு முறை வெளிநடப்பு செய்தது அதிமுக .

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று எதிர்கட்சி வரிசையில் எம்.எல்.ஏ களாக அமர்ந்துஇருக்கிறார்கள்.அவர்கள் நினைத்தால் திமுகவின் முறைகேடு ,தவறுகளை வெளிக்கொண்டு வர முடியும் .ஆனால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது போல் எதையும் பேசுவதில்லை. .உதயநிதியின் விளையாட்டுத்துறையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன ,ஆனால் அதனை பற்றி பேசாமல் அமைச்சர் வேலுமணி “இலவச ஐ.பி.எல்.டிக்கெட் கேட்கிறார் , நினைத்தால் ஒரு ஸ்டேடியத்தையே விலைக்கு வாங்கலாம் ,ஓசி டிக்கெட் கேக்கிறாரே?” மக்கள் கேலி செய்கிறார்கள், என்கிறார் ஜெகதீஸ்வரன் .
Share on:

பாஜகவை எதிர்க்கக்கூடிய தலைமை தற்போதைய அதிமுகவில் யாருக்கும் இல்லை!


திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்து கொண்ட கலந்துரையாடலின் பொழுது கூறியதாவது ,மக்களை போல கீழ்மட்டத்தில் ,கிளைஅளவில் உள்ள இருந்தும்,இருக்கின்றவர்கள் தான் அண்ணாதிமுக கட்சியை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .மேலும் அவர் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றவர்கள் அனைவரும் திருடர்கள் என்றும் ,அவர்கள் குடும்பம் பிழைப்பதற்கும் ,அவர்களை பாதுகாத்து கொள்வதற்கும் .அவர்கள் பினாமி பிழைப்பதற்கும்,அவர்கள் கமிஷன் ஏஜென்ட் பணம் பார்ப்பதற்கும் தான் இது எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .

மேலும் உரையாடலின் பொழுது இவர்கள் அனைவருமே மக்களிடமும் தொண்டர்களிடமும் நடித்து கொண்டு இருப்பதால் இவர்கள் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு தைரியம் கிடையாது என்று கூறியுள்ளார் .அவருடைய உரையாடலின் போது தொண்டர் ஒருவரும் கோவமாக பாஜக இருக்கும் வரை நாம் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார் .இதிலிருந்து தொண்டர்கள் அனைவருக்கும் பாஜகவின் மேல் அதிகஅளவு வெறுப்பு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
Share on:

தமிழகத்தில் சாதியா?கட்சியா? என்று வரும் பொழுது திராவிட கட்சிகளில் கட்சிதான் வென்று இருக்கிறதே தவிர சாதி வென்றதாக சரித்திரம் இல்லை



திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில் கலந்துகொண்டு நிருபரிடம் கலந்துரையாடிய பொழுது அவர் கூறியது ,தமிழ்நாட்டில் உள்ள சாதிக்கும் கட்சிக்கும் பார்க்கும் பொழுது வன்னியர் வாக்கு அன்னியர்க்கு இல்லை என்ற ராமசாமி படையாட்சி காலத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் அவர்கள் ஆரம்பித்த காலம் ,இப்பொழுது 2019-ல் கொங்கு பகுதியில் சிலிண்டர் சின்னத்தில் கொங்கு கட்சி ஆரம்பித்த காலம் ,தென்மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவர் போன்று இந்த காலகட்டங்களில் ஓர் emotional ஆக அது பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே ஒழிய ஒரு long term victory -அ கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார் .

மேலும் கலந்துரையாடலின் பொழுது கடைசியாக சாதியா ?கட்சியா ? என்று பார்க்கும் பொழுது திராவிட கட்சிகளில் கட்சி தான் வெற்றிபெற்று இருக்கிறதே தவிர சாதி வென்றதாக இதுவரை தமிழகத்தில் சரித்திரம் இல்லை என்றும் ,மேலும் சாதி தமிழகத்தில் வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளார் .
Share on: