திமுகவை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பயப்படுவதற்கு காரணம்!


திமுகவை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பயப்படுவதற்கு காரணம் அவர்கள் செய்த குற்றங்கள் தான் என்கிறார் அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன்.எப்போதெல்லாம் திமுக அரசை விமர்சிக்க நினைக்கிறார்களோ , அப்பொழுது அவர்கள் செய்த குற்றங்களான ஊழல்,ரெய்டு போன்றவற்றை கையிலெடுக்கிறார்,ஸ்டாலின் .சட்டசபையில் கொடநாடு வழக்கு என்று பேசியபோது எடப்பாடி வெளியேறியதால் அவரை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ களும் வெளிநடப்பு செய்தார்கள் .இதே போன்று இருக்கை பிரச்சனைக்காக மட்டும் எட்டு முறை வெளிநடப்பு செய்தது அதிமுக .

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று எதிர்கட்சி வரிசையில் எம்.எல்.ஏ களாக அமர்ந்துஇருக்கிறார்கள்.அவர்கள் நினைத்தால் திமுகவின் முறைகேடு ,தவறுகளை வெளிக்கொண்டு வர முடியும் .ஆனால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது போல் எதையும் பேசுவதில்லை. .உதயநிதியின் விளையாட்டுத்துறையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன ,ஆனால் அதனை பற்றி பேசாமல் அமைச்சர் வேலுமணி “இலவச ஐ.பி.எல்.டிக்கெட் கேட்கிறார் , நினைத்தால் ஒரு ஸ்டேடியத்தையே விலைக்கு வாங்கலாம் ,ஓசி டிக்கெட் கேக்கிறாரே?” மக்கள் கேலி செய்கிறார்கள், என்கிறார் ஜெகதீஸ்வரன் .
Share on: