“அதிமுக என்ற பேரியக்கத்துக்கே பெரிய ஆபத்து!”

அதிமுக என்றாலே அது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் கட்சியாக தான் எம்.ஜி.ஆர்., அம்மா காலத்தில் இருந்தது. அம்மாவின் மறைவுக்குப்பிறகு, சாத்திய பாகுபாடு அதிகரித்தது. தற்போது எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையிலான மோதலால் ரொம்பவே அதிகமாகியிருக்கிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் – தினகரன்சந்திப்புக்கு பின்னர் அதிமுகவில் சாதியப் பாகுபாடு பூதாகரமாகிவிட்டது.

திராவிடக் நிலை மாறி கட்சி சசிகலா,பன்னீர்,தினகரன்,வைத்திலிங்கம் என ஒரு அணியாகவும் எடப்பாடி,வேலுமணி,தங்கமணி என இன்னொரு அணியாகவும் எதிரெதிராகவே நிற்கிறார்கள். இவர்கள் இப்படி சாதிரீதியாக அடித்துக்கொள்வதால், கட்சிக்கு அப்பாற்பட்ட பலரும் அதில் சேர்ந்துகொள்கிறார்கள். இதை அதிமுக-வின் தொண்டர்களும் வாக்காளர்களும் துளியும் விரும்பவில்லை. இது எடப்பாடிக்கும் பண்ணீருக்கும் ஏன் அதிமுக என்ற பெரியக்கத்திற்குமே பெரிய ஆபத்தாக முடியும்!
Share on: