எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள்!

கர்நாடகத்தில் பாஜகவை EPS-ம் OPS-ம் விழுந்து விழுந்து கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள் .தேர்தலை முன்னின்று நடத்தினார் அண்ணாமலை .தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தேர்தலில் போட்டியிட்டார்.,

இவர்கள் அனைவரும் ஒருசேர தோற்று பாஜக ஆட்சி கர்நாடகத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. .தமிழகத்திலும் EPS, OPS இல்லாத, பாஜக கூட்டணி இல்லாத சாதி, மதம், லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட தொண்டர்களால் உருவாக்கப்படும் தலைமையால் வழிநடத்தப்படும் அதிமுகவிற்கும்,திமுக கூட்டணிக்கும் நாடாளுமன்ற தேர்தல் போட்டியாக அமையும் .அதில் அதிமுக நிச்சயம் நாற்பதையும் வென்றெடுக்கும்.

தொண்டர்களால் தலைமை என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் விதியை அழிக்க துணை நின்ற பா.ஜ.க அழித்த EPS, OPS அனைவருக்கும் எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் .

Share on: