
பி.ஜே.பி தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு ,அதில் அதிமுக வில் உள்ள உட்கட்சி பிரச்சனையில் பிரிந்துஇருபவர்களை அந்த கூட்டணியில் தனித்தனி அங்கங்களாக சேர்த்து அதற்கு திரு.ரஜினிகாந்த் அவர்களின் ஆதரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்று ,ஒரு கூட்டணியை கட்டமைக்க
பி.ஜே.பி முயற்சி செய்கிறது . திரு.ரஜினிகாந்த் அவர்கள் 2020-ல் அந்த தேர்தலில் அவர் வரப்போவதில்லை என்று சொன்ன பிறகு அந்த நேரத்தில் சில கணிப்புகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்வைத்தார் .அதில் அதிகபட்சமாக 12% முதல் 15% சதவீதம் வாக்குகளை தான் நாம் பெற முடியும் .அப்பொழுது அந்த மூன்றாவது அணி திரு.ரஜினிகாந்த் அவர்கள் கட்டமைப்பது வெற்றி பெறாது .அதனால் யாரையும் சிரமப்படுத்த விரும்பவில்லை ,நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்கின்ற அளவில் அவர் கூறினார் .அதனால் அவர் முழுவதும் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என்று அவர் கூறவில்லை .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
குழுவில் இணைய