தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற திரு.மோடி அவர்கள் வலியுறுத்தவில்லை ஏன்?


கச்சத்தீவு திமுக மற்றும் காங்கிரஸால் கட்சிகளால் இலங்கைக்கு வழங்கப்பட்டது
அதைத் திரும்பப் பெற அதிமுக எப்போதும் முயல்கிறது. இலங்கைக்கு 7500கோடி கடன் வழங்கும்போது பாஜக அரசு தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற திரு.மோடி அவர்கள் வலியுறுத்தவில்லை ஏன்?
இலங்கை அரசால் துன்புறுத்தப்படும் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் சேதப்படுத்தப்படும் படகுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி அளித்த சீனா, இலங்கையில் உள்ள துறைமுகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஆனால் மீனவர் உரிமையை இந்தியா ஏன் திரும்பப் பெறவில்லை?
அதிமுகவும், எம்.ஜி.ஆரும் எப்பொழுதும் இலங்கைத் தமிழர்களை மற்றும் தமிழக மீனவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க முயல்கின்றனர். தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: