பா.ஜ.க’வின் செய்தித் தொடர்பாளராகத் திரு.எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகத் திரு.மோடி அவர்கள் ஊழலுக்கு எதிரானவர் அவர் நெருப்பு போன்றவர் ஊழல் எண்ணத்துடன் அருகில் சென்றால் அழிந்துவிடுவார்கள் என்று பா.ஜ.க.விற்கு சாதகமாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது . திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பா.ஜ.க.வினை கண்டுகொள்ளாமல் கூட இருக்கலாம் ஆனால் இவர் பா.ஜ.க.விற்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டு அக்கட்சிக்கு வலு சேர்த்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல் திரு.மோடியைப் பற்றி மட்டுமே பேசுகிறார் தி.மு.க.வை எதிர்த்தும் பேசுவதில்லை ஆ.தி.மு.க.வை பலப்படுத்தும் நோக்கிலும் செயல்படுவதில்லை . திரு.எடப்பாடி பழனிச்சாமி, அவரின் வழக்குகளின் சூழ்நிலையையும் அவரது குடும்ப சூழ்நிலையையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் கட்சியின் நிலை பற்றிச் சற்றும் கருத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA