பா.ஜ.க’வின் செய்தித் தொடர்பாளராகத் EPS செயல்பட்டு வருகிறார்


பா.ஜ.க’வின் செய்தித் தொடர்பாளராகத் திரு.எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகத் திரு.மோடி அவர்கள் ஊழலுக்கு எதிரானவர் அவர் நெருப்பு போன்றவர் ஊழல் எண்ணத்துடன் அருகில் சென்றால் அழிந்துவிடுவார்கள் என்று பா.ஜ.க.விற்கு சாதகமாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது . திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பா.ஜ.க.வினை கண்டுகொள்ளாமல் கூட இருக்கலாம் ஆனால் இவர் பா.ஜ.க.விற்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டு அக்கட்சிக்கு வலு சேர்த்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல் திரு.மோடியைப் பற்றி மட்டுமே பேசுகிறார் தி.மு.க.வை எதிர்த்தும் பேசுவதில்லை ஆ.தி.மு.க.வை பலப்படுத்தும் நோக்கிலும் செயல்படுவதில்லை . திரு.எடப்பாடி பழனிச்சாமி, அவரின் வழக்குகளின் சூழ்நிலையையும் அவரது குடும்ப சூழ்நிலையையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் கட்சியின் நிலை பற்றிச் சற்றும் கருத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: