S.P.வேலுமணியின் தர்ணா போராட்டம் ! கோவையில் வாக்கு சதவிகிதம் குறைய காரணமாக அமைந்ததா?


கோவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 60-சதவீதம் வெற்றி பெரும், திமுக 40-சதவீதம் தான் வெற்றி பெரும் எனினும் அன்று மதியம் (19.02.2022) திரு.வேலுமணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு, வெளிஊர்களில் இருந்து ஆட்களை அழைத்துவந்து பணப்பட்டுவாடா செய்கிறார்கள், கலவரத்திற்கு திட்டமிட்டுள்ளார்கள், எங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கூறுவது சட்டம் ஒழுங்கிற்கு எதிரான செயல், ஆயினும் அவ்வாரு சம்பவங்கள் நடக்கையில் தி.மு.க வினரும் அ.தி.மு.க’வினரும் அதனை எதிர்கொண்டு வெற்றிப்பெறுகிற செயலில் ஈடுபட்டிருப்பார்கள்.
அன்று திரு .வேலுமணி வீட்டில் இருந்திருந்தாலே அந்தந்த வார்டுகளில் உள்ள வேட்பாளர்கள் அவர்களின் பணிகளை சிறப்பாக செய்திருப்பார்கள் அதற்கு மாறாக இவர் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் அ.தி.மு.க வினரை நாம் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ நடப்பது நடக்கட்டும் என்ற என்னதை உருவாகிவிட்டார்.
தலைமை பொறுப்பிலிருந்து இவ் இயக்கத்தை வழிநடத்துபவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்துக்களும் கொள்கைகளும் , திராவிட இயக்கத்தின் வரலாரும் தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: