அதிமுக பாஜக கூட்டணிக்குள் பிரச்சினையில்லை!


பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை என்றும் அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையே கடந்த ஓராண்டு காலமாகவே பிரச்சினை நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. அண்ணாமலை தலைவரானதில் இருந்தே தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார்.

அவ்வப்போது அண்ணாமலை பேசும் பேச்சுக்கள் அதிமுக பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தி விடும். அப்படித்தான் ஜெயலலிதா பற்றியும் அண்ணாவைப் பற்றியும் அண்ணாமலை கூறியது பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது என்று கூறினார் ஜெயக்குமார். கடந்த 2 நாட்களாகவே அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையை வசைபாடினர். எடப்பாடி பழனிச்சாமியோ எந்த கருத்தும் கூறாமல் அமைதி காத்து வந்தார். ஆனால் பாஜகவை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியானது.

எங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என்றும் மோடிதான் பிரதமர் என்றும் கூறினார் செல்லூர் ராஜூ. அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, மோடியை பிரதமராக ஏற்கிறது அதிமுக. பிறகு பிரச்சனை . தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக – பாஜக இடையே சித்தாந்தங்கள் வேறு வேறு எனும் போது சில முட்டல் , மோதல் இருக்கத்தான் செய்யும். பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை.அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன்.

மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதே இலக்கு. எந்த கட்சிக்கும் பாஜக போட்டி இல்லை. அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன். அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டது என்று ஜெயக்குமார் சொன்ன நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை
Share on: