அமைதியான வழியில் போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது!


‘திருவண்ணாமலையில் தன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் என்ற விவசாயியை பாலியல் குற்றவாளி, கள்ளச்சாராய குற்றவாளி, விபச்சார தொழில் குற்றவாளி போன்றவர்களை கைது செய்யும் குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைது செய்துள்ளது. திருவண்ணாமலையில் போராட்டம் செய்தவரை அவரது குடும்பம் எளிதாக சந்திக்க கூடாது என்பதற்காக மதுரை சிறையில் கொண்டு போய் அடைத்துள்ளார்கள்.

விவசாயிகள் மீது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்? தமிழ்நாட்டின் சர்வாதிகாரி என்ற நினைப்பு உங்கள் தலைக்கு ஏறி விட்டதா?

அரசாங்கத்தை எதிர்த்து அமைதியாக போராட்டம் செய்யும் விவசாயிகள் குண்டர்களா? இது தான் உங்கள் கட்சி வாய் கிழிய பேசும் சமூக நீதியா?’ என்று அறப்போர் இயக்கம் கேள்வியெழுப்பியுள்ளதை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்க்கு ஆதரவாக குரல்கொடுக்க தொடங்கியுள்ளனர்.
Share on: