மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்


உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார். அவரதுக்கு வயது 102. சளி, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் சங்கரய்யா

பொது உடமை இயக்கத்தை வலுப்படுத்திய சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்து போட ஆளுநரின் செயலைக் கண்டித்து பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார் பொன்முடி. இந்த நிலையில் சங்கரய்யாவின் மறைவு அரசியல் கட்சியினரிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Share on: