இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் யார்?


இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் யார்? காவல் துறையா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களா?

காவல்துறை ஆணையரின் தவறுகளை மறைப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலமாக மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டிருக்கிறது. பெருவாரியான மக்கள் ஒரு இடத்தில் திரளுகிறார்கள் என்றால் அதற்குரிய பாதுகாப்பு, போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உறுதிசெய்ய வேண்டியது காவல்துறையின் கடமையா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கடமையா? அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அழிக்கும்போதே காவல் துறை இவை அனைத்தும் பரிசீலித்து அனுமதி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?
Share on: