மணல் குவாரிகளில் குடையும் ஈடி! திமுக அரசின் “பிக் பிரதர் நம்பர் 2” டார்கெட்?


அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள், அவருடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தவர்களின் இடங்கள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என்பதுடன் இந்த விவகாரம் முடியவில்லை.. ஆளும் திமுக அரசின் பெருங்கரம் ஒன்றை நோக்கியே இந்த ரெய்டுகள் நகரப் போகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

இந்த முறை மணல் குவாரிகளை இலக்கு வைத்து தமிழ்நாடு முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை.

மணல் குவாரிகளை மையமாக வைத்து..:: வேலூர், திருச்சி, நாமக்கல் என மணல் குவாரி சார்ந்த இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்து ஆட்டம் காட்டி வருகின்றனர். தலைமை செயலக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அமலாக்கத்துறையின் இந்த ரெய்டு போக்கானது செந்தில் பாலாஜி தொடர்புடையதாக தோன்றலாம். ஆனால் இவர்களது டார்கெட் திமுக அரசின் மிகப் பெரும் புள்ளி ஒருவரை நோக்கியதாக நகருவதையே காட்டுகிறது. திமுகவிலும் திமுக அரசிலும் ‘வலதுகரமாக’ இருக்கும் அந்த புள்ளிக்குதான் டார்கெட் பிக்ஸ் செய்திருக்கிறது போல அமலாக்கத்துறை என்கின்றனர்.
Share on: