இன்று ’தமிழ்நாடு நாள்’; மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் நினைவாக இன்று ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பள்ளிகளில் தமிழர்களின் தொன்மை, கலாச்சாரம் மற்றும் பெருமையினை உணர்த்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இத்தினத்தில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்தும் விதமாக, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதற்காக போராடிய சங்கரலிங்கனார் உள்ளிட்ட தலைவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
Share on: