சபரீசனோடு என்ன பேசினார் OPS ?



இம்முறை அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு சீட் கொடுக்காவிட்டாலும் மறைமுகமாக திமுக மற்றும் பாஜகவின் ஆதரவோடு மீண்டும் மகனை MPஆக்க சுமூக உறவை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடைபிடிக்கிறார்.மேலும் 2011-2015 வரை திமுக அமைச்சர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எதுவும் 2016-2021 காலகட்டங்களில் எடப்பாடி பழனிசாமியால் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது .ஆனால் அதற்கு கைமாறாக தற்பொழுது இவர்களை பாதுகாத்து கொண்டிருக்கிறது திமுக.

மேலும் மு.க.ஸ்டாலின் ,உதயநிதி ஸ்டாலின் ,எ.வ.வேலு போன்ற இவர்களுக்கு எதிராக பலகீனமான அதிமுக கூட்டணி வேட்பாளர்களே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .அதே போன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பலகீனமான தி.மு.க வேட்பாளரே நிறுத்தப்பட்டு இருக்கிறார் .

இதுபோன்ற மறைமுக பேரங்களின் மூலம் எடப்பாடி பழனிசாமியை ஐ வீழ்த்த ஓ.பன்னீர்செல்வமும் ம்,அதே போன்று ஓ.பன்னீர்செல்வத்தை ஐ வீழ்த்த எடப்பாடி பழனிசாமியும் செய்கிற முயற்சிகள் இருவரும் சேர்ந்து அதிமுகவை வீழ்த்துவதற்கான வியூகம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.எனவே அதிமுகவை காப்பது என்பது தொண்டர்கள் கையில் தான் உள்ளது.
Share on: