பாஜக கூட்டணியை அதிமுக உதறியது சரிதானா?


பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நல்ல  முடிவு .இந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு .ஒருவேளை உறுதியாக இல்லாமல் மீண்டும் பாஜக கூட்டணியை தேடி சென்றால் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் .அதை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.

பாஜகவை பொருத்தவரை அதிமுகவை தங்கள் பக்க, கொண்டு வர சகல அஸ்த்திரங்களையும் பயன்படுத்தும் .ஏக்நாத் ஷிண்டேக்களை உருவாக்குவார்கள் .அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தது போல அதிமுக தலைவர்கள்   பலரது வீடுகளில் ரெய்டு நடக்கும் .இதை தண்டி கட்சியை உடைக்க பார்ப்பார்கள்.தேர்தல் ஆணையத்தின் மூலம் நெருக்கடி கொடுப்பார்கள் .எனவே 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை அதிமுகவுக்கு சோதனை காலம்தான் .அதை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

2014ல் பாஜக தனித்து ஒரு அணியை உருவாக்கியது போல் இப்போது உருவாக்க முடியாது .அப்போது மோடி பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார் .எனவே அவர் மீது பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இல்லை .ஆனால் இப்போது அப்படி இல்லை .ஓ பி எஸ் ,தினகரன் ,சசிகலா மற்றும் பா ம க ஆகியோரை சேர்த்துக்கொண்டு சாதி கூட்டணி வேண்டுமானால் அமைக்கலாம் .மூன்றாவது அணியாக நோட்டாவுடன் போட்டி போடலாம் .தமிழகத்தை பொறுத்தவற்றி வின்னர் .ரன்னர் மட்டுமே வாக்குகளை வாங்குவார்கள் .மூன்றாவதாக ஒருவர் வாக்குகளை வாங்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.

OPS எப்போதுமே பாஜகவின் தீவிர விசுவாசிதான் .அவர் எந்த காலத்திலும் தனியாக கட்சி தொடங்கமாட்டார் .பாஜவுக்கு துணையாக இருப்பார் .ஒரு கட்டத்தில் பாஜகவில் சேர்ந்துவிடுவார் .அவரது எதிர்காலத்தை பாஜகதான் தீர்மானிக்கும் .அதேசமயம் பாஜவை எதிர்க்கும் துணிவு ஓ பி எஸ் ,தினகரன் ,சசிகலா ஆகியோரிடம் இல்லை.

மத்திய அரசு மாநில அரசு இரண்டையும் எதிர்த்து தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது .தேர்தல் காலத்தில் சகல ஆயுதங்களையும் அவர்கள் பிரயோகிப்பார்கள் .எனவே அதிமுகவில் பிரிந்திருப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் .ஓ பி எஸ் ,சசிகலா,தினகரனை நான் சொல்லவில்லை .என்னை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இழந்த வாக்குகள் மீண்டும் அதிமுகவை நோக்கி வரும் .அது மட்டுமல்ல .திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளும் அதிமுகவுக்கு விழும்.

கட்சி தொண்டர்களால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் .ஏனெனில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவில் இன்னொரு எம் ஜி ஆரோ .ஜெயலலிதாவோ இல்லை.பல கோணங்களில் பல வலிமையுள்ள தலைவர்கள் ஒன்றுகூடி பயணித்தால் ,முயற்சித்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் .எடப்பாடியால் அனைத்தையும் செய்ய முடியுமா என்றால் முடியாது .எனவே அனைத்து தரப்பின் பலத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்னுடைய நிலைப்பாடு – K.C.Palanisamy
Share on: