பி.ஜே.பி தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு ,அதில் அதிமுக வில் உள்ள உட்கட்சி பிரச்சனையில் பிரிந்துஇருபவர்களை அந்த கூட்டணியில் தனித்தனி அங்கங்களாக சேர்த்து அதற்கு திரு.ரஜினிகாந்த் அவர்களின் ஆதரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்று ,ஒரு கூட்டணியை கட்டமைக்க
பி.ஜே.பி முயற்சி செய்கிறது . திரு.ரஜினிகாந்த் அவர்கள் 2020-ல் அந்த தேர்தலில் அவர் வரப்போவதில்லை என்று சொன்ன பிறகு அந்த நேரத்தில் சில கணிப்புகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்வைத்தார் .அதில் அதிகபட்சமாக 12% முதல் 15% சதவீதம் வாக்குகளை தான் நாம் பெற முடியும் .அப்பொழுது அந்த மூன்றாவது அணி திரு.ரஜினிகாந்த் அவர்கள் கட்டமைப்பது வெற்றி பெறாது .அதனால் யாரையும் சிரமப்படுத்த விரும்பவில்லை ,நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்கின்ற அளவில் அவர் கூறினார் .அதனால் அவர் முழுவதும் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என்று அவர் கூறவில்லை .
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற OPS ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புகிறது. சசிகலா தொடர்ந்த வழக்கிற்கும் சரியான விடை கிடைக்கவில்லை. இடியாப்ப சிக்கல் எனும் உவமைக்கு இந்த வழக்கு மிகச்சரியாக பொருந்தும். இந்த சிக்கலை அவிழ்க்க நீதிமன்றம் தொட வேண்டியது, இந்த வழக்குகளை அல்ல. இந்த வழக்கின் அடிப்படையாக எம்.ஜி.ஆர். அவர்களின் உயிலுடனும், அவர் வகுத்த விதிகளுடனும் தொடக்கப்புள்ளி வைத்த முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி அவர்கள் தொடர்ந்த வழக்கைத்தான்.
அடிப்படை கேள்விகளுக்கு விடையளிக்காமல் இறுதி கேள்விகளுக்கு விடையை தேடிக்கொண்டிருக்கிறது நீதிமன்றம். எப்படி கிட்டும்? அதிமுக எனும் மகத்தான கழகத்தை பாதுகாக்கும் பொறுப்பை எம்.ஜி.ஆர்.அவர்களும், அம்மா அவர்களும் யாரிடமும் விட்டு செல்லவில்லை. அடிமட்ட தொண்டர்களிடம் தான் விட்டு சென்றனர். அவர்களில் 80 சதவிகிதத்தினர் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமை ஏற்க வேண்டும் என்றும், பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி யாரும் கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.
இது தொடர்பான வழக்குகளையும் வாதங்களையும் விசாரிக்காமல், நேரடியாக OPS தொடர்ந்த வழக்கிற்கு, பொதுக்குழுவிற்கு பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளது என்ற அடிப்படையில்லாத சமன்பாடுகளை சரிசெய்ய நினைக்கிறது நீதிமன்றம். இதனால்தான் கே.சி.பழனிசாமி அவர்கள் நீதிமன்றத்தின் மேலும், தேர்தல் ஆணையத்தின் மேலும் நம்பிக்கை இல்லை என்று முடிவெடுத்து தொண்டர்களை திரட்டி உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
நாம் தொண்டர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு ஒரு தற்காலிக உறுப்பினர் அட்டை வழங்கி, கிளைச்செயலாளருக்கும் பொதுச்செயலாளருக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தி நமக்கான தலைமையை தேர்ந்தெடுப்பதே நீதிமன்றம் செய்த பிழைக்கும், தேர்தல் ஆணையம் செய்த பிழைக்கும் ஒரு தீர்வாக அமையும்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.ஐ திமுகவில் இருந்து நீக்க எண்ணற்ற முயற்சிகள் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கருணாநிதியை தயங்க செய்தது. அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் பொதுக்குழு. தனக்கு வேண்டியவர்களை மட்டுமே கொண்ட அப்பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆர்.ஐ கட்சியில் இருந்து நீக்கியது திமுக.
இப்படியொரு நிலை, தான் தோற்றுவித்த கழகத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், யாரும் பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுகவை தொடங்கும்போதே பொதுக்குழுவிற்கு சிலவற்றை தவிர எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. அந்த சிலவும் கொள்கை ரீதியிலான அதிகாரங்களே. குறிப்பாக யாரையும் நீக்கவோ கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கவோ எந்த அதிகாரமும் பொதுக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.
பிறகு யார்தான் தலைமையை தீர்மானிப்பர் என்ற கேள்விக்கு, கட்சியிலுள்ள 80 சதவிகித தொண்டர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமையை நிர்வகிப்பார் என்ற ஆகச்சிறந்த முடிவுகளை எடுத்தார். இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் இல்லாத தனித்துவம் அதிமுகவிற்கு இருக்கிறது என்றால், அது எம்.ஜி.ஆர். அவர்களால் கொண்டுவந்த இந்த தீர்மானமே ஆகும். அதுவே ஜனநாயகமாகும்.
இப்போது OPS மற்றும் EPS க்கு இடையே நிலவும் மோதல்போக்கிற்கும் அதிமுக உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கும் அன்றே விடை சொன்னவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவ்வாறு நடந்தால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அதிமுகவின் விதிகளை மாற்றி, தனக்கு வேண்டியவர்களை மட்டும் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமித்து, தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டார் EPS. இது ஜனநாயகமா?
நீதிமன்றங்களின் மூலம் அரசியல் மோசடி செய்து கொண்டிருக்கிறார் EPS. நீதிமன்றங்களையும் தேர்தல் ஆணையத்தையும் புறக்கணித்துவிட்டு, நமக்கான தலைமையை நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்போம். நூறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு லட்சம் கிளைகளை உருவாக்கி, குறைந்தது ஒரு கோடி தொண்டர்களிடம் உறுப்பினர் அட்டையை கொடுத்து வாக்குகளை சேகரித்து, தலைமையை நியமிக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால் தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
இதற்கான முன்னெடுப்பை இன்றிலிருந்து துவக்க வேண்டும். நாம் ஒவ்வொரு கிளையிலும் குறைந்தது நூறு பேரையாவது திரட்டி ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவோம். எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டுச்சென்ற பாதையையும் பணிகளையும் நாம்தான் மீட்டு செயல்படுத்த வேண்டும். ஒன்றிணைவோம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.ஐ திமுகவில் இருந்து நீக்க எண்ணற்ற முயற்சிகள் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கருணாநிதியை தயங்க செய்தது. அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் பொதுக்குழு. தனக்கு வேண்டியவர்களை மட்டுமே கொண்ட அப்பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆர்.ஐ கட்சியில் இருந்து நீக்கியது திமுக.
இப்படியொரு நிலை, தான் தோற்றுவித்த கழகத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், யாரும் பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுகவை தொடங்கும்போதே பொதுக்குழுவிற்கு சிலவற்றை தவிர எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. அந்த சிலவும் கொள்கை ரீதியிலான அதிகாரங்களே. குறிப்பாக யாரையும் நீக்கவோ கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கவோ எந்த அதிகாரமும் பொதுக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.
பிறகு யார்தான் தலைமையை தீர்மானிப்பர் என்ற கேள்விக்கு, கட்சியிலுள்ள 80 சதவிகித தொண்டர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமையை நிர்வகிப்பார் என்ற ஆகச்சிறந்த முடிவுகளை எடுத்தார். இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் இல்லாத தனித்துவம் அதிமுகவிற்கு இருக்கிறது என்றால், அது எம்.ஜி.ஆர். அவர்களால் கொண்டுவந்த இந்த தீர்மானமே ஆகும். அதுவே ஜனநாயகமாகும்.
இப்போது OPS மற்றும் EPS க்கு இடையே நிலவும் மோதல்போக்கிற்கும் அதிமுக உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கும் அன்றே விடை சொன்னவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவ்வாறு நடந்தால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அதிமுகவின் விதிகளை மாற்றி, தனக்கு வேண்டியவர்களை மட்டும் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமித்து, தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டார் EPS. இது ஜனநாயகமா?
நீதிமன்றங்களின் மூலம் அரசியல் மோசடி செய்து கொண்டிருக்கிறார் EPS. நீதிமன்றங்களையும் தேர்தல் ஆணையத்தையும் புறக்கணித்துவிட்டு, நமக்கான தலைமையை நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்போம். நூறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு லட்சம் கிளைகளை உருவாக்கி, குறைந்தது ஒரு கோடி தொண்டர்களிடம் உறுப்பினர் அட்டையை கொடுத்து வாக்குகளை சேகரித்து, தலைமையை நியமிக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால் தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
இதற்கான முன்னெடுப்பை இன்றிலிருந்து துவக்க வேண்டும். நாம் ஒவ்வொரு கிளையிலும் குறைந்தது நூறு பேரையாவது திரட்டி ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவோம். எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டுச்சென்ற பாதையையும் பணிகளையும் நாம்தான் மீட்டு செயல்படுத்த வேண்டும். ஒன்றிணைவோம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலங்களில் டெல்லியில் பிரதமர் முதல் பிற அமைச்சர்கள் வரை அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கும் என்று காத்துக்கொண்டிருப்பர். மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த காலகட்டம், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் கேட்டு பெற்று கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது.
அப்படி ஒரு சூழலில் எம்.ஜி.ஆர். மன்மோகன்சிங் சந்திப்பு நிகழ்ந்தது. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை வளர்ச்சி திட்டங்களுக்காக புரட்சி தலைவர் மன்மோகன்சிங் அவர்களிடம் கேட்டபோது, "கடும் நிதிநெருக்கடியில் மத்திய அரசு உள்ளது. நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி தர முடியாது" என்று மன்மோகன்சிங் கூறியதை கேட்டதும் கோபத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் பிரதமர் ராஜீவகாந்தி அவர்களிடம் இருந்து மன்மோகன்சிங்கிற்கு ஒரு உத்தரவு. எம்.ஜி.ஆர். கேட்பதையெல்லாம் கொடுத்து விடுங்கள் என்று. முடியாது என்று சொன்ன மன்மோகன்சிங் ஐ பதற வைத்தார் புரட்சி தலைவர்.
அம்மா அவர்களின் காலகட்டங்களிலும் இது போன்று மத்திய அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இப்போது இருக்கும் அதிமுகவின் தலைமை ஊழல் வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் பயந்து, எப்போதும் டெல்லியை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறது. பிரதமர் தமிழகம் வந்தால் அதிமுக தலைமையிடம் அனுமதி வாங்கி காத்திருந்து சந்தித்து சென்ற காலம் போய், பிரதமரை வரவேற்க ஒருவரும், வழியனுப்ப ஒருவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களா புரட்சி தலைவர் உருவாக்கிய கழகத்தின் தலைவர்கள்? இதுவா அவர் காண்பித்த வழி? இதனால் யாருக்கு பலன்? EPS க்கும், OPS க்கும் என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அனால் அந்த பாம்பு இவர்களை ஒரு நாள் விழுங்கி அதிமுக வையும், தமிழகத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பது இவர்களுக்கு இன்னும் புலப்படவில்லை. இவர்களின் சுய லாபத்திற்காக அதிமுக எனும் மகத்தான கழகத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை போன்று மத்திய அரசின் அடிமைகளாக இருக்கும் தலைமையை வேரறுத்து தொண்டர்களை நல்லதொரு பாதையில் அழைத்து செல்ல வேண்டுமென்றால், தொண்டர்கள் தினமும் இதனை பற்றி கவலை படுவதால் எதுவும் நடந்து விடாது. ஒன்றுபட வேண்டும். தொண்டர்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமை உருக்க வேண்டும்.
நாளைய எதிர்காலம் தொண்டர்கள் கையில்தான் உள்ளது. அனைத்து தொண்டர்களும் தங்களுக்கான உறுப்பினர் அட்டையை பெற்று சரியான தலைமையை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் தலைமையே, புரட்சி தலைவர் வழி நடத்திய கழகத்தின் உண்மையான தலைமை. ஏதோ நான்கு பேர் சேர்ந்து கழக நிர்வாகிகள் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கும் தலைமையெல்லாம், டெல்லிக்கு தலையாட்டும் தலைமையே.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலங்களில் டெல்லியில் பிரதமர் முதல் பிற அமைச்சர்கள் வரை அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கும் என்று காத்துக்கொண்டிருப்பர். மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த காலகட்டம், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் கேட்டு பெற்று கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது.
அப்படி ஒரு சூழலில் எம்.ஜி.ஆர். மன்மோகன்சிங் சந்திப்பு நிகழ்ந்தது. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை வளர்ச்சி திட்டங்களுக்காக புரட்சி தலைவர் மன்மோகன்சிங் அவர்களிடம் கேட்டபோது, "கடும் நிதிநெருக்கடியில் மத்திய அரசு உள்ளது. நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி தர முடியாது" என்று மன்மோகன்சிங் கூறியதை கேட்டதும் கோபத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் பிரதமர் ராஜீவகாந்தி அவர்களிடம் இருந்து மன்மோகன்சிங்கிற்கு ஒரு உத்தரவு. எம்.ஜி.ஆர். கேட்பதையெல்லாம் கொடுத்து விடுங்கள் என்று. முடியாது என்று சொன்ன மன்மோகன்சிங் ஐ பதற வைத்தார் புரட்சி தலைவர்.
அம்மா அவர்களின் காலகட்டங்களிலும் இது போன்று மத்திய அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இப்போது இருக்கும் அதிமுகவின் தலைமை ஊழல் வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் பயந்து, எப்போதும் டெல்லியை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறது. பிரதமர் தமிழகம் வந்தால் அதிமுக தலைமையிடம் அனுமதி வாங்கி காத்திருந்து சந்தித்து சென்ற காலம் போய், பிரதமரை வரவேற்க ஒருவரும், வழியனுப்ப ஒருவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களா புரட்சி தலைவர் உருவாக்கிய கழகத்தின் தலைவர்கள்? இதுவா அவர் காண்பித்த வழி? இதனால் யாருக்கு பலன்? EPS க்கும், OPS க்கும் என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அனால் அந்த பாம்பு இவர்களை ஒரு நாள் விழுங்கி அதிமுக வையும், தமிழகத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பது இவர்களுக்கு இன்னும் புலப்படவில்லை. இவர்களின் சுய லாபத்திற்காக அதிமுக எனும் மகத்தான கழகத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை போன்று மத்திய அரசின் அடிமைகளாக இருக்கும் தலைமையை வேரறுத்து தொண்டர்களை நல்லதொரு பாதையில் அழைத்து செல்ல வேண்டுமென்றால், தொண்டர்கள் தினமும் இதனை பற்றி கவலை படுவதால் எதுவும் நடந்து விடாது. ஒன்றுபட வேண்டும். தொண்டர்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமை உருக்க வேண்டும்.
நாளைய எதிர்காலம் தொண்டர்கள் கையில்தான் உள்ளது. அனைத்து தொண்டர்களும் தங்களுக்கான உறுப்பினர் அட்டையை பெற்று சரியான தலைமையை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் தலைமையே, புரட்சி தலைவர் வழி நடத்திய கழகத்தின் உண்மையான தலைமை. ஏதோ நான்கு பேர் சேர்ந்து கழக நிர்வாகிகள் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கும் தலைமையெல்லாம், டெல்லிக்கு தலையாட்டும் தலைமையே.
தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு நம்பிக்கை என்பது அதிமுக தொண்டர்கள் இடத்தில் இல்லை . பி ஜே பி விருப்பத்திற்கு ஏற்ப தான் தேர்தல் ஆணையம் தங்கள் முடிவுகளை எடுக்கிறார்கள் .ஓ பி எஸ் பொறுத்தவரைக்கும் இந்த இரட்டை தலைமை தொடர வேண்டும் துன்று நினைத்து கொண்டிருக்கிறார் . இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் இருவருமே சாதிய அரசியலை கையில் எடுக்கிறார்கள் . புரட்சித்தலைவர் காலத்தில் அந்த சாதிய அரசியல் கிடையாது .மற்ற சமூகத்தினர் அதிகமாக இருக்கின்ற இடங்களில் கூட ஒரு சின்ன சமுதாயத்தினர் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும் .அவர்களும் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் .சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டதுதான் அண்ணா தி.மு.க.ஆனால் இன்றைக்கு இ பி எஸ் அவர்கள் தான் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் .அதே போல ஓ பி எஸ் ,சசிகலா ,தினகரன் போன்றோர் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் . கே பி முன்னுசாமி அவர்கள் தான் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.இவர்கள் அனைவருமே ராமதாஸ் ஆக வேண்டும் என்று முயற்சிக்கிறார்களே ஒழிய இன்னொரு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழியிலே அண்ணா தி மு க என்றொரு மாபெரும் இயக்கம் தொண்டர்களால் ஒரு தலைமை உருவாக்கப்பட்டு அந்த தலைமை வழிநடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவில் இவர்கள் இல்லை . கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
சி.வி .ஷண்முகம் டெல்லியில் ஒரு பேட்டியில். எப்படி முஸ்லிம்களுக்கு புனிதஸ்தலம் இருக்கிறதோ ,கிறித்தவர்களுக்கு புனிதஸ்தலம் இருக்கிறதோ ,ஹிந்துக்களுக்கு ஒரு புனித ஸ்தலம் இருக்க, அதுபோல அண்ணா தி மு க தொண்டனுக்கு தலைமைகழகம் என்று அவர் கூறியது மிக சரி தான்.
அதே சமயம் எப்படி பைபிளோ ,எப்படி குரானோ அதுபோல அண்ணா தி மு க தொண்டனுக்கு புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் எழுதி வைத்த அண்ணா தி மு க கட்சியினுடைய விதிகள் ,அதை மட்டும் ஏன் வந்து இவர்கள் அந்த வழியில் நடப்பதற்கு இவர்கள் ஏற்று கொள்வதற்கு இவர்கள் மறுப்பதற்கு காரணம் என்ன ?அப்போ அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையா ? ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் . கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
ஓராண்டு திமுக ஆட்சி வெறும் விளம்பரத்திலேயே போய்விட்டது. திரு ஸ்டாலின் அவர்கள் பேருந்தில் ஏறிக் கண்காணிப்பது, தீயணைப்பு அலுவலகம் சென்று சாதாரண அதிகாரியிடம் விசாரிப்பது, நரிக்குறவர் வீட்டிற்குச் சென்று புரட்சித்தலைவரைப் போன்று ஆகவேண்டும் என்று நினைப்பது. ஆனால் எந்தக்காலத்திலும் திரு ஸ்டாலின் அவர்கள் புரட்சித்தலைவரைப் போன்று ஆகமுடியாது.
பிரசாந்த் கிஷோர் கொடுத்த விளம்பரத்தில் தான் இந்த ஓராண்டு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதிலும் சொல்வது போன்று ஒரு சிறப்பும் இல்லை தொழில்துறைகள் எல்லாம் மிகவும் மோசமாக உள்ளது இவை எதையும் கண்டுகொள்ளாமல் நவீன முறையில் ஊழல் செய்துகொண்டு நல்லவர் போல் தன்னை காட்டிக்கொள்கின்றனர்.அதனால் மக்களுக்கு இந்த திமுகவின் ஓராண்டு ஆட்சி ஏமாற்றமாகவே உள்ளது.
இவர்களுக்குச் சரியான ஒரு எதிர் அணி உருவாகவேண்டும் அதற்கு அதிமுகவில் நல்ல கட்டமைப்பு வேண்டும்.சசிகலாவின் முயற்சிகளும் எந்த பலனும் அளிக்காது. EPS & OPS அவர்களும் எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் உள்ளனர். எனவே புரட்சித்தலைவர் கால தொண்டர்கள் ஒருங்கிணைந்து வலிமையான ஒற்றைத்தலைமையை உருவாக்கவேண்டும். அதுவும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பிராண்ட் குறிப்பிட்ட தவற்றினை செய்கிறார்கள் என்பதனை ஆளுநர் மத்திய அரசாங்கத்தின் உள்துறைக்கு அறிக்கையாகச் சொல்லலாம் அதுவும் மாநில அரசின் முதலமைச்சருக்கோ உள்துறைக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ தெரிவித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு அது தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கூறலாம் ஆனால் அதை எல்லாம் கடந்து பொது வெளியில் பேசுவது ஏற்புடையது அல்ல வழக்கமாக ஆளுநர்கள் அவ்வாறு பேசுவது இல்லை . இருப்பினும் சட்டம் ஒழுங்கு என்பது ஒரு தீவிரவாத பிரச்சனையாகத் தமிழ்நாட்டில் கருதப்படும் நிலையில் இது ஒரு உணர்திறன் கொண்ட ஒரு கருத்து என்பதால் பொதுவெளியில் ஆளுநர் அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டுப் பேசவேண்டும் , அல்லது தமிழ்நாட்டு அரசாங்கம் ஆளுநர் சொல்வது தவறு என்பதற்குக் கடுமையான எதிர் வினையாற்ற வேண்டும் கே.சி.பழனிசாமி- Ex MP, MLA