கனவு பழிக்காது அண்ணாமலை, எம்ஜிஆர் ஆட்சியை நிச்சயம் அதிமுக தொண்டர்கள் அமைப்பார்கள் எல்லோரும் அடிமைகள் என்று என்ன வேண்டாம் அண்ணாமலைக்கு எச்சரிக்கை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
2022-23 நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை வரும்18ஆம் தேதி தாக்கல்
2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுக தேர்தல் வாக்குறுதிகளாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் உரிமை தொகை, மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, விவசாயம் மற்றும் கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாய்வுக்கு மானியம் போன்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக ஆட்சி பொறுப்பேற்று ஏறத்தாழ ஒரு வருடம் நெருங்கும் இவ்வேளையில். திமுக அளித்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றபடும் என்று மக்கள் எதிர்பார்ப்போடு காத்துகொண்டு இருக்கின்றனர்.
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை வரும் 18 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளாக தமிழக அரசாங்கம் அளித்த பல்வேறு திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கபடுமா?? அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைமுறைப்படுத்த படுமா ??
மக்களின் இந்த எதிர்பார்க்குகளை 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மூலமாக தமிழக அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்
ஆதிமுக’விற்கு எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட வாக்கு வங்கி 25% அதை எந்தக்காலத்திலும் அசைக்க முடியாது, ஆகையால் ஆதிமுக தலைமை எவ்வாறு அமையவேண்டும் என்றால் பாஜக’வை கடுமையாக எதிர்த்து நின்று திமுக’விற்கு போகின்ற எதிர்ப்பு ஓட்டுகள் 12சதவீதம் ஆதிமுக’விற்கு திரும்பப் பெற வேண்டும், மேலும் திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தி , பாஜக விற்கு செல்கின்ற திமுக எதிர்ப்பு ஒட்டு 2%யும் ஆதிமுக’விற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்கையில் நமக்கு 40% ஒட்டு என்பது உறுதியாகிவிடுகிறது.
எனவே ஆதிமுக’வின் தலைமை என்பது பாஜக’விற்கு எதிரான நிலைப்பாட்டில் திராவிட கொள்கைகளிலும், திராவிட சித்தாந்தங்களிலும், எம்ஜிஆர் வழியிலும் அம்மாவின் வழியிலும் பயணிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
பெண்களின் சிறப்பை உணர்த்தும் தினம்
நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான கனவுகளைக் கொண்ட பல மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்துள்ளது!
அதிகக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தங்களது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் போன்று பிற நாடுகளுக்குச் சென்று படித்துவரும் மாணவர்கள் உக்ரைனிலிருந்து வெளியேற முடியாமலும்-தங்களது மருத்துவக் கனவு
என்ன ஆகுமோ என்ற கவலையிலும், இன்னல்களைச் சந்தித்து வரும்
மாணவர்கள் குறித்து மத்திய அரசு தெரிவித்து வரும் கருத்துகள் ஏற்புடையது அல்ல.
மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்திய நீட் தகுதித் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளைச் சிதைக்கும் நோக்கில் உள்ளது.
நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான கனவுகளைக் கொண்ட பல மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்துள்ளது. இந்த நீட் தேர்வின் காரணமாகப் பல மாணவர்கள் உக்ரைன், சீனா போன்ற பிற நாடுகளுக்கு மருத்துவம் பயிலச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது மற்றும் சில மாணவ கண்மணிகள் தங்களது மருத்துவ கனவு நினைவாகாத காரணத்தால் உயிரை மாய்த்தும் கொண்டுள்ளனர்.
பணம் & செல்வ பலம் பொருந்தியவர்கள் மட்டுமே மருத்துவ பயில இயலும் என்று நிலை தற்போது இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும் நிலவி வருகிறது. எனவே இந்த நீட் தேர்வை நடைமுறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கைவிட்டு உயர்கல்வி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்குச் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அ.தி.மு.க அடிப்படை கொள்கை தி.மு.க.வுக்கு நேர்மறையானது… ஆனால் ?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அ.தி.மு.க., என்ற கட்சியை துவக்கியபோது, அதன் அடிப்படை கொள்கை தி.மு.க.வுக்கு நேர்மறையானது. அக்கட்சியின் தற்போதைய தலைமை ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கூட்டணியை & விதிமுறையை பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை திமுக கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருக்கும் அதே வேளையில், அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதன் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டது அதில் அதிமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை, அதேசமயம் பாஜக தனித்து நின்று ஆதாயம் அடைந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், அதிமுக வெறும் 25.15 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. சுயேச்சையாகப் போட்டியிடத் தேர்ந்தெடுத்த அதன் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் வாக்குப் பங்கைப் பெற்றன – பாஜக 5.41 சதவீதம், பாமக 1.51 சதவீதம் மற்றும் தேமுதிக 0.77 சதவீதம்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அதிமுக வேட்பாளர்களுக்கே கட்சி நிதி சரிவரச் சென்று சேரவில்லையா?
அ.தி.மு.க. கட்சி தொண்டர்களோடு எனது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர்கள் கூறியது , பல இடங்களில் பணத்தைப் பெற்றுக்கொண்டு சீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது , பலபேருக்குக் கட்சியிலிருந்து எந்த விதமான நிதி உதவியும் வழங்கப்படவில்லை மற்றும் தவறான தேர்தல் வியூகங்கள், இவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி இல்லை என்று அறிவித்த அன்று இருந்த உற்சாகம் அடுத்த 24மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்ற அறிவிப்பால் மறைந்தது.
E.P.S மற்றும் O.P.S என்ன சத்திய பிரமாணம் செய்தாலும் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் , இந்த இயக்கம் எம் .ஜி .ஆர் காலத்திலிருந்த முன்னோடிகளை முன்னிறுத்தப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும் . நகரச்செயலாளர் முதல் ஒன்றியச்செயலாளர், மாவட்டச்செயலாளர் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தலைமை வரை தொண்டர்களிடத்தில் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் இவ்வாறு செயல்படும்பொழுது தான் வலிமையான அ.தி.மு.க.உருவாகும்.
இன்னும் சம்பிரதாய நடைமுறைகளை நாம் செய்து கொண்டிருப்பின் இரட்டை இலையைப் பார்த்து வாக்களிப்பவர்கள் என்றென்றும் நம்மை ஆதரிப்பார்கள்! கண்டிப்பாக இந்த இருவரது தலைமை அகற்றப்படும்!
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
74வது பிறந்த தினம்! மாண்புமிகு இதய தெய்வம் அம்மா
காவல்துறையினர் சற்று மரியாதையாக நடத்தியிருக்கலாம்
திரு.ஜெயக்குமார் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் காவல்துறையினர் அவரை சற்று மரியாதையாக நடத்தியிருக்கலாம் உடை மாற்றி வரும் வரை அவகாசம் அளித்துக் கைதுசெய்திருக்கலாம், காவல்துறையினரின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது.
அரசியலில் அதிக மக்களின் நன்மதிப்பையும் , நற்பெயரையும் , இவர் நேர்மையானவர், நாணயமானவர், சட்டப்படி நடந்துகொள்கின்றவர் என்ற அபிமானம் தான் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேவை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
S.P.வேலுமணியின் தர்ணா போராட்டம் ! கோவையில் வாக்கு சதவிகிதம் குறைய காரணமாக அமைந்ததா?
கோவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 60-சதவீதம் வெற்றி பெரும், திமுக 40-சதவீதம் தான் வெற்றி பெரும் எனினும் அன்று மதியம் (19.02.2022) திரு.வேலுமணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு, வெளிஊர்களில் இருந்து ஆட்களை அழைத்துவந்து பணப்பட்டுவாடா செய்கிறார்கள், கலவரத்திற்கு திட்டமிட்டுள்ளார்கள், எங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கூறுவது சட்டம் ஒழுங்கிற்கு எதிரான செயல், ஆயினும் அவ்வாரு சம்பவங்கள் நடக்கையில் தி.மு.க வினரும் அ.தி.மு.க’வினரும் அதனை எதிர்கொண்டு வெற்றிப்பெறுகிற செயலில் ஈடுபட்டிருப்பார்கள்.
அன்று திரு .வேலுமணி வீட்டில் இருந்திருந்தாலே அந்தந்த வார்டுகளில் உள்ள வேட்பாளர்கள் அவர்களின் பணிகளை சிறப்பாக செய்திருப்பார்கள் அதற்கு மாறாக இவர் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் அ.தி.மு.க வினரை நாம் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ நடப்பது நடக்கட்டும் என்ற என்னதை உருவாகிவிட்டார்.
தலைமை பொறுப்பிலிருந்து இவ் இயக்கத்தை வழிநடத்துபவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்துக்களும் கொள்கைகளும் , திராவிட இயக்கத்தின் வரலாரும் தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA