திமுக & பாஜக மீதான எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கும் வலிமையான ஒற்றை தலைமை தேவை !


ஓராண்டு திமுக ஆட்சி வெறும் விளம்பரத்திலேயே போய்விட்டது. திரு ஸ்டாலின் அவர்கள் பேருந்தில் ஏறிக் கண்காணிப்பது, தீயணைப்பு அலுவலகம் சென்று சாதாரண அதிகாரியிடம் விசாரிப்பது, நரிக்குறவர் வீட்டிற்குச் சென்று புரட்சித்தலைவரைப் போன்று ஆகவேண்டும் என்று நினைப்பது. ஆனால் எந்தக்காலத்திலும் திரு ஸ்டாலின் அவர்கள் புரட்சித்தலைவரைப் போன்று ஆகமுடியாது.
பிரசாந்த் கிஷோர் கொடுத்த விளம்பரத்தில் தான் இந்த ஓராண்டு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதிலும் சொல்வது போன்று ஒரு சிறப்பும் இல்லை தொழில்துறைகள் எல்லாம் மிகவும் மோசமாக உள்ளது இவை எதையும் கண்டுகொள்ளாமல் நவீன முறையில் ஊழல் செய்துகொண்டு நல்லவர் போல் தன்னை காட்டிக்கொள்கின்றனர்.அதனால் மக்களுக்கு இந்த திமுகவின் ஓராண்டு ஆட்சி ஏமாற்றமாகவே உள்ளது.
இவர்களுக்குச் சரியான ஒரு எதிர் அணி உருவாகவேண்டும் அதற்கு அதிமுகவில் நல்ல கட்டமைப்பு வேண்டும்.சசிகலாவின் முயற்சிகளும் எந்த பலனும் அளிக்காது. EPS & OPS அவர்களும் எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் உள்ளனர். எனவே புரட்சித்தலைவர் கால தொண்டர்கள் ஒருங்கிணைந்து வலிமையான ஒற்றைத்தலைமையை உருவாக்கவேண்டும். அதுவும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: