
பாஜக நினைப்பது அவர்களுக்கு அடங்கி போகின்ற கைபொம்மையாக அதிமுகவில் பொதுச்செயலாளரை தக்க வைக்க வேண்டும் என்பது தான்!

2,000 ரூபாய்த் தாளை மாற்ற வரும் ஒவ்வொருவரிடமும் ஆதார் அட்டையும், பான் அட்டையும் (PAN Card) வங்கியில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். அவற்றின் பிரதியை, மூலத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்த்த பின், வங்கியில் வைத்துக் கொள்வார்கள்.
தங்கள் வங்கிக் கணக்கில் பணமாகக் கட்டுபவர்களுடைய ஜாதகம் வங்கியில் ஏற்கனவே இருக்கும். உதாரணமாக, ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) என்கிற விதியின் படி, வங்கிக் கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
அடுத்தாக, ஒருவர் மாற்றுகிற 2,000 ரூபாய்த் தாளின் கூட்டு மதிப்பு (Cumulative Value) ரூ.50,000-ஐத் தாண்டினாலோ, கணக்கில் செலுத்தும் தொகையின் கூட்டு மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினாலோ, அவர்களுடைய விவரங்கள் வருமானவரித் துறைக்கு வங்கிகளின் கணினி வலைப்பின்னல் வாயிலாகத் தானாகவே போய்ச் சேர்ந்து விடும்.
உடனே களத்தில் இறங்கும் வருமானவரித் துறை அதிகாரிகள், பரிசீலனையில் இருக்கும் நபர்களின் கடந்த 3…
கர்நாடகத்தில் பாஜகவை EPS-ம் OPS-ம் விழுந்து விழுந்து கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள் .தேர்தலை முன்னின்று நடத்தினார் அண்ணாமலை .தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தேர்தலில் போட்டியிட்டார்.,
இவர்கள் அனைவரும் ஒருசேர தோற்று பாஜக ஆட்சி கர்நாடகத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. .தமிழகத்திலும் EPS, OPS இல்லாத, பாஜக கூட்டணி இல்லாத சாதி, மதம், லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட தொண்டர்களால் உருவாக்கப்படும் தலைமையால் வழிநடத்தப்படும் அதிமுகவிற்கும்,திமுக கூட்டணிக்கும் நாடாளுமன்ற தேர்தல் போட்டியாக அமையும் .அதில் அதிமுக நிச்சயம் நாற்பதையும் வென்றெடுக்கும்.
தொண்டர்களால் தலைமை என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் விதியை அழிக்க துணை நின்ற பா.ஜ.க அழித்த EPS, OPS அனைவருக்கும் எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் .
சாதி, சமய பாகுபாடின்றி நலிந்தவர்களையும் பெண்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது திராவிட சித்தாந்தம். இயற்கையை அழிக்கும் எந்த நாடும் மாநிலமும் முன்னேறியதில்லை. இதன் மூலம் தான் தமிழகம் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் வருவதற்கு 75 ஆண்டுக்கு முன்பே இந்த இலக்குகள் திராவிட மேன் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை. அதிமுக எந்த கட்சி கூட நட்பு கொண்டாலும் இதன் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
மற்ற மக்களை பிரித்தாள நினைக்கும் இபிஎஸ்-ன் சாதி பூசலும் பாஜக வின் மத சாயமும் அதிமுக-விற்கு எதிரானவை.
அதிலும் பாஜக என்பது கொடிய விஷம். குடும்பம் முதல் தேசம் வரை உள்ளுக்குள்ளவே கலகம் மூட்டுவதில் தேர்ந்தவர்கள். இவர்கள் கொள்கைகள் பல தரப்பிலும் ஒருவருக்கொருவர் பகைமையை தூண்டும். மத வெறி, சாதி வெறி, பணக்காரர் சார்பு, பணம் சுருட்டும் உத்திகள், இயற்கை சூழல் அழிப்பு, நவீன அவுட் சோர்ஸ் டிஜிட்டல் ஊழல், ஜனநாயக…