திமுக & பாஜக மீதான எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கும் வலிமையான ஒற்றை தலைமை தேவை !


ஓராண்டு திமுக ஆட்சி வெறும் விளம்பரத்திலேயே போய்விட்டது. திரு ஸ்டாலின் அவர்கள் பேருந்தில் ஏறிக் கண்காணிப்பது, தீயணைப்பு அலுவலகம் சென்று சாதாரண அதிகாரியிடம் விசாரிப்பது, நரிக்குறவர் வீட்டிற்குச் சென்று புரட்சித்தலைவரைப் போன்று ஆகவேண்டும் என்று நினைப்பது. ஆனால் எந்தக்காலத்திலும் திரு ஸ்டாலின் அவர்கள் புரட்சித்தலைவரைப் போன்று ஆகமுடியாது.
பிரசாந்த் கிஷோர் கொடுத்த விளம்பரத்தில் தான் இந்த ஓராண்டு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதிலும் சொல்வது போன்று ஒரு சிறப்பும் இல்லை தொழில்துறைகள் எல்லாம் மிகவும் மோசமாக உள்ளது இவை எதையும் கண்டுகொள்ளாமல் நவீன முறையில் ஊழல் செய்துகொண்டு நல்லவர் போல் தன்னை காட்டிக்கொள்கின்றனர்.அதனால் மக்களுக்கு இந்த திமுகவின் ஓராண்டு ஆட்சி ஏமாற்றமாகவே உள்ளது.
இவர்களுக்குச் சரியான ஒரு எதிர் அணி உருவாகவேண்டும் அதற்கு அதிமுகவில் நல்ல கட்டமைப்பு வேண்டும்.சசிகலாவின் முயற்சிகளும் எந்த பலனும் அளிக்காது. EPS & OPS அவர்களும் எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் உள்ளனர். எனவே புரட்சித்தலைவர் கால தொண்டர்கள் ஒருங்கிணைந்து வலிமையான ஒற்றைத்தலைமையை உருவாக்கவேண்டும். அதுவும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

பொதுவெளியில் ஆளுநர் குற்றச்சாட்டு சரியா?


தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பிராண்ட் குறிப்பிட்ட தவற்றினை செய்கிறார்கள் என்பதனை ஆளுநர் மத்திய அரசாங்கத்தின் உள்துறைக்கு அறிக்கையாகச் சொல்லலாம் அதுவும் மாநில அரசின் முதலமைச்சருக்கோ உள்துறைக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ தெரிவித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு அது தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கூறலாம் ஆனால் அதை எல்லாம் கடந்து பொது வெளியில் பேசுவது ஏற்புடையது அல்ல வழக்கமாக ஆளுநர்கள் அவ்வாறு பேசுவது இல்லை . இருப்பினும் சட்டம் ஒழுங்கு என்பது ஒரு தீவிரவாத பிரச்சனையாகத் தமிழ்நாட்டில் கருதப்படும் நிலையில் இது ஒரு உணர்திறன் கொண்ட ஒரு கருத்து என்பதால் பொதுவெளியில் ஆளுநர் அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டுப் பேசவேண்டும் , அல்லது தமிழ்நாட்டு அரசாங்கம் ஆளுநர் சொல்வது தவறு என்பதற்குக் கடுமையான எதிர் வினையாற்ற வேண்டும்
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து குடும்பத்தலைவிகளை ஏமாற்றிவிட்டார்களா ?


தி.மு.க.ஆட்சியில் சமீபத்தில் நடந்த தேர் விபத்தில் 11பேர் இறந்ததற்கு அரசு அதிகாரிகள் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளின் அலட்சியம் மட்டுமே காரணமாக இருக்க முடியும் அதற்கு ரூபாய் 5லட்சம் கொடுப்பது சரியான தீர்வு அல்ல மேலும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க அதிகாரிகள் அவர்களது பணியில் கவனமாக இருந்தால் போதும் மற்றும் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்த மகளிருக்கான ரூபாய் 1000 தற்பொழுது வரை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதன் விளைவு குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை எனவே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் ரூபாய்1000 விநியோகிப்பதனால் மட்டுமே பெண்களுக்கு வீட்டில் மதிப்பு ஆனால் முதலமைச்சர் அவர்கள் இதனை எல்லாம் தவிர்த்துவிட்டு ECR சாலைக்குத் திரு. கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர்மாற்றம் செய்வதில் முனைப்பு கட்டுவது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

மாவட்டச் செயலாளர்களுக்கே மீண்டும் வாய்ப்பு! கண்துடைப்பா அதிமுக அமைப்பு தேர்தல்?


ஏற்கனவே பதவியில் இருக்கும் நிர்வாகிகளுக்கே மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளை வழங்கி வருவதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படாமலே குறுநில மன்னர்கள் போல் அப்பதவியில் நீடிப்பார்கள் என்றும் அவர்களை மீறி மாவட்டத்தில் எந்த கட்சி பதவிக்கும், யாரும் எளிதாக வந்து விட முடியாது என்ற குற்றச்சாட்டும் அக்கட்சியில் நிரந்தரமாகவே உள்ளது.
அதற்கு நேர்மாறாக அதிமுகவில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த வரை மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எந்நேரத்திலும் மாற்றப்படலாம், அவர்கள் இடத்திற்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்ற நிலை இருந்தது.
பதவிப் பறிக்கப்படப் போகிறவர்கள், புதிதாக அவர்கள் இடத்திற்கு வரப்போகிறவர்கள் யார் என்று யாராலும் எளிதாக கணித்து விட முடியாது. அதுபோல், சரியாக கட்சிப் பணியாற்றவில்லை, தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் ஏதாவது வந்தால், உடனடியாக மாவட்டச் செயலாளர்களை தயவு தாட்சணியம் இன்றி பதவியில் இருந்து தூக்கி எறியவும் ஜெயலலிதா தயங்கமாட்டார் என்பதாலே அதிமுகவில் கடைநிலை நிர்வாகி கூட திடீரென்று மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களாக்கப்பட்ட வரலாறு அடிக்கடி நிகழும்.
அதனால், கட்சியில் மற்ற நிர்வாகிகள் ஜெயலலிதா கவனத்தை ஈர்க்க போட்டிப்போட்டு கட்சிப் பணியாற்றினர். திடீர் உயர்வுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால் மாற்று கட்சியினரும் அதிமுகவை நோக்கி படையெடுத்தனர். அப்படி சாதாரணமாக இருந்து ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பு முதல் மாவட்ட செயலாளர்கள் வரை அதிகார மையங்களாக இயங்குகின்றனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் தங்கள் வந்தவழியை மறந்து, தற்போது திமுகவை போல் பெயரளவுக்கு கட்சித் தேர்லை நடத்தி மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பதவிகளுக்கு ஏற்கனவே இருந்து அதிகாரம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் அப்பதவிகளை தாரை வார்த்து கொடுத்து வருவதாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:
‘ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது அதிமுக அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் மும்முரமாக நடக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கான உட்கட்சி தேர்தலில் ஏற்கனவே அப்பதவிகளில் இருந்தவர்களே மீண்டும் அப்பதவிகளுக்கு விருப்பமனு கொடுக்கின்றனர். அவர்களை எதிர்த்து வேறு யாரும் பெரும்பாலும் விருப்பமனு கொடுக்கவில்லை. மீறி யாரும் விருப்பமனு கொடுத்தால் கட்சியில் ஓரங்கட்டப்படுவோம் என்பதால் அவர்களால் விருப்பமனு கொடுக்க முடியவில்லை.
ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சிலர் போட்டி விருப்பமனு கொடுத்துள்ளனர். அவர்களை வாபஸ் வாங்க கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதுபோல் மற்ற மாவட்ட நிர்வாகிகள் பதவியில் இருப்பவர்களும் அதே நிலையில் மீண்டும் தொடர வேண்டும் என்று கூறப்பட்டதால் அந்த பதவிகளுக்கும் பெரியளவிற்கு யாரும் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை.
அதனால், கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் அதிமுகவில் பெயரளவுக்கே நடத்தப்படுகிறது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவை மீறி யாரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்பமனு வழங்கவில்லை.
புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமாரை மீறி யாரும் விருப்பமனு செய்யவில்லை. ஆர்பி.உதயகுமார் ஏற்கனவே ஜெ., பேரவை மாநில செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. செல்லூர் ராஜூவை எதிர்த்து நேற்று மதியம் வரை யாரும் விருப்பமனு வழங்கவில்லை. அதன்பிறகே முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆர்.ராஜாங்கம், எஸ்எஸ்.சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் கடும் எதிர்ப்பையும் மீறி செல்லூர் ராஜூவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு வழங்கினர்.
கட்சித் தலைமை ஆசி செல்லூர் கே.ராஜூவுக்கு இருப்பதால் அவரே மீண்டும் மாநகர மாவட்டச் செயலாளராகும் வாய்ப்புதான் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்பு இருந்த முன்னாள் அமைச்சர் ராஜநே்திரன்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராகி இருக்கிறார். விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ரவிச்சந்திரன் மீண்டும் மாவட்டச் செயலாளராக தேர்வாகி இருக்கிறார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக 15 ஆண்டிற்கு மேலாக இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீண்டும் தேர்வாகி இருக்கிறார். திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் தேர்வாகியிருக்கிறார். இருவரும் மாநில பதவியில் வேறு இருக்கிறார்கள். அப்படியிருந்தும் மாவட்டச் செயலாளர் பதவியை இருவருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லை.
தேனி மாவட்டச் செயலாளர் பதவிக்கு எஸ்பிஎம்.சையதுகான் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 8 பேர் விருப்பமனு கொடுத்திருந்தாலும் பேச்சுவார்தை செய்து மீண்டும் சையதுகானையை மாவட்டச் செயலாளராக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் பதவிக்கு மீண்டும் செந்தில்நாதன் விருப்பமனு கொடுத்துள்ளார். அவரை எதிர்த்து 4 பேர் விருப்பமனு வழங்கியிருந்தாலும் செந்தில்நாதன்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராக வருவார்.

இப்படி தமிழகம் முழுவதும் பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளே மீண்டும் தொடர வைக்க கட்சித் தலைமை திட்டமிட்டு இருப்பதால், ஜெயலலிதாவை போல் கட்சி அமைப்பில் புதியவர்களை கொண்டு வந்து கட்சியை வளர்க்க, தற்போதுள்ள கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காததாலே நிர்வாகிகள் பாஜக, திமுக பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர். இப்படியே போனால் அதிமுக தேய்ந்து கொண்டே தான் போகும், ’’ என்றனர்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

ஆளுநர் அனுமதி மறுப்பு சட்ட நெருக்கடி என்பது வெளிப்படையாக தெரிகிறது


சட்டமன்றத்தில் துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு தான் உள்ளது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் சட்டமாக்கப்பட வேண்டுமென்றால் ஆளுநர் கையெழுத்திட்டு அனுமதி கொடுத்தால் மட்டுமே முடியும். 8 கோடி மக்களால் 10 கோடி ஜனத்தொகை உள்ள தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் இயற்றப்படுகிற எந்த சட்டத்திற்கும் இதுவரை கிட்டத்தட்ட 19 மசோதாக்களுக்கு ஆளுநர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து எதற்கும் கையெழுத்திடவில்லை இந்த மசோதாவிற்கு மட்டும் எப்படி அவர் கையெழுத்திடுவார், இது ஒரு அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி என்பது வெளிப்படையாக தெரிகிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அவர்களின் சுயநலத்திற்காக அச்சாணி இல்லாத தேர் போல தொண்டர்களை வழிநடத்துகிறார்கள்


அம்மா அவர்களின் மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாகத் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுவெளியில் திருமதி. சசிகலா அவர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறார் பின்பு அவரே ஆறுமுகசாமி ஆணையத்தில் அதற்கு நேர் மாறாகச் செய்த சில விஷயங்கள் திரு.ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் எந்த அளவு தரம் தாழ்ந்து இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக மட்டுமே அ.தி.மு.க. தொண்டர்களையும் அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத் தொண்டர்கள் தற்பொழுது உணர்ந்திருக்கிறார்கள். அதேபோல் இதில் தனக்கும் தொடர்பு உள்ளது என்று திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திரு. வேலுமணி அவர்களும் கூறுகின்றனர் எனவே இச்சம்பவத்தில் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குத் தொடர்பு உள்ளது என்று உறுதியானாலும் கூட திருமதி.சசிகலா அவர்கள் புனிதமானவர் என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தொண்டர்கள் தயாராக இல்லை எனவே இவர்கள் யாரும் சரியான தலைவர்களாக அ.தி.மு.க. விருக்கு இல்லை அச்சாணி இல்லாத தேராக அ.தி.மு.க. தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஆகையால் தொண்டர்களால் ஒரு தலைமை தேர்ந்தெடுக்கும் பொது தான் வலிமையான தலைமை உருவாகும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

EPS & OPS பாஜகவுக்கு அடிபணிந்து, திமுகவையும் அனுசரித்து பெயரளவுக்கு எதிர்கட்சியாக செயல்படுகிறார்களா?


அ.தி.மு.க. கழக நிர்வாகிகள் பா.ஜ.க.விற்கு அடிமைகளாகவும் தி.மு.க.வுடன் ஒரு உடன்பாடோடும் செயல்படுகிறார்கள் , அ.தி.மு.க.ஆட்சியில் நடந்த ஊழல்களை தி.மு.க.கண்டுகொள்ள வேண்டாம் அதேபோல் தற்போது நடக்கும் ஊழல்களை நாங்களும் கண்டுகொள்ள மாட்டோம் பெயரளவிற்கு மக்களை ஏமாற்றுகிற வகையில் ஒரு நாடகத்தை நடத்துவோம் என்கின்ற சமரச போக்கில் செயல்படுகிறார்கள் . எதிர் கட்சி தலைவரது அரசியல் என்பது சட்டமன்றத்திருந்து வெளிநடப்பு செய்து ஒரு பேட்டியை கொடுப்பதுடன் முடிந்து விடுகிறது மற்றும் ஆளுநருக்கு பா.ஜ.க. சொல்லும் திட்டங்களை ஆதரித்து செயல்படுவது , எனவே ஒவ்வொரு அ.தி.மு.க.தொண்டனும் அம்மா அவரகள் காலத்திலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.காலத்திலும் சட்டசபையில் இன்றைய நிலைப்பாட்டை உணர்வுகளோடு பார்க்கும் நிலை மாறிவிட்டது என்பது வருந்தத்தக்கது
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

கொடநாடு வழக்கில் சசிகலாவின் வாக்குமூலம் யாருக்கு சாதகமாக அமையும்?


திரு.ஆறுக்குட்டி அவர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப் பட்டபோது சமீப நாட்களில் திருமதி.சசிகலாவிற்கு ஆதரவாக சில கருத்துக்களைக் குறி வந்தது தெரிய வந்தது எனினும் பொதுச்செயலாளர் குறித்த வழக்கிற்கும் திருமதி.சசிகலா அவர்களுக்கு உரிமை இல்லை என்ற தீர்ப்பு வந்ததற்குப் பிறகுச் சற்று வேகமாகத் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய சில ஆதாரங்களை வெளிக்கொண்டு வருவதிலும் அவர் செய்த தவற்றை வெளிக்கொண்டு வருவதிலும் சற்று முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் திரு.எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாகத் திருமதி. சசிகலா அவர்களை விசாரித்த பிறகு சயான், உத்திரகௌண்டன் பாளையம் இளங்கோவன், முன்னாள் அமைச்சரான திரு.S.P.வேலுமணி மற்றும் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியவர்களை விசாரித்து குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம். திரு.ஆறுக்குட்டி அவர்களின் நண்பர்களின் கருத்து என்பது கோடா நாடு பங்களாவிலிருந்த பொருட்கள் எவை அவற்றுள் எவை எவை காணாமல் போயின காணாமல் போன பொருட்கள் தற்பொழுது எங்கு உள்ளது போன்ற கேள்விகளுக்குத் திரு. ஆறுக்குட்டி அவர்கள் பதிலளித்துள்ளார். பூங்குன்றனுக்கும், திருமதி.சசிகலா அவர்களுக்கும் ஆறுக்குட்டியை விட அதிகமாகத் தெரியும் என்றும் அங்கிருந்து காணாமல் போன பல பொருட்கள் திரு.வேலுமணி மற்றும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடத்திலும் இருப்பதாக ஒரு தகவல் திரு.ஆறுக்குட்டி அவர்கள் வட்டாரங்களிடத்தில் கசிந்துகொண்டு இருக்கிறது. எனவே இதற்கு பிறகும் திருமதி.சசிகலா அவர்கள் திரு.எடப்பாடி பழனிச்சாமியிடம் எந்த சமரசமும் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
பொதுச்செயலாளர் வழக்கின் தீர்ப்பு திருமதி.சசிகலா அவர்களுக்குச் சாதகமாக வரும் நிலையில் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரித்து ஒருங்கிணைத்து இருக்கலாம் ஆனால் தற்பொழுது எந்த வித தயவு தச்சனையும் இல்லாமல் எதிர்த்து அடிப்பதற்குத் திருமதி.சசிகலா அவர்கள் தயாராகியுள்ளார் என்பது தெரியவருகிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

நீட் தேர்வில் விலக்கு பெற இந்த இரண்டு வழியில் ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்!


உள்ளாட்சித் தேர்தல் நடந்துகொண்டிருக்கின்ற அந்த காலகட்டத்தில் நீட் பிரச்சனையை ஆளுநர் திரும்ப அனுப்பும் நிலையில் சற்றும் சிந்திக்காமல் சட்டமன்றத்தைக் கூட்டி அணைத்து கட்சிகளும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டது அந்த சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பாக அணைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு வங்கி அரசியலுக்குத் திராவிட கழகம் அதனைப் பயன்படுத்திக் கொண்டது. அத்தகைய சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நிறைவுற்ற பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூற தவறியதால் திரு. ஸ்டாலின் அவர்கள் விரித்த வலையில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் மாட்டிக்கொண்டனர்.அத்தகைய தினம் சட்டமன்றத்தில் ஒரு மிகப்பெரிய விவாதமாக ஆளுநரை வெற்றிகொண்டு விட்டார் திரு.ஸ்டாலின் என்கின்ற அளவில் பெரிது படுத்தப்பட்டது.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் விலக்கு பெற வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும் அல்லது திரு. மோடி அவர்களை அணுகி அவரது ஆசீர்வாதத்தோடு விலக்கு பெற வேண்டும். அரசியல் செய்வதற்கு மட்டுமே திராவிடக் கழகம் இதனைப் பயன்படுத்துகிறார்களே தவிரத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நலன் தெரிவிக்கும்
நிலையில் மாணவர்களுக்கு நீட் விலக்கு பெற்றுத்தருகிற முனைப்போடு அவர்கள் செயல்படவில்லை.
திரு.உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது நீட் விலக்கு பெற ரகசியம் தாங்கலுக்கு மட்டுமே தெரியும் ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்து போன்ற தவறான வாக்குறுதிகளைக் கூறி தமிழ்நாட்டு மாணவர்களைத் தவறாக வழிநடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அதிமுகவை பலவீனப் படுத்தும் பாஜக அதனால் பலனடைவது திமுகவா?பாஜகவா? தமிழ்நாட்டுக்கு வலிமையான அதிமுக தேவை!


அ.தி.மு.க.வை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் EPS OPS உள்பட அவர்களது செயல்பாடுகளை சட்டமன்றத்தில் பார்க்கும்பொழுது அனைவரும் தி.மு.க.வில் இணைந்து விடுவார்கள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து விடும் என்று பேட்டி கொடுத்த ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் கூற கூட தயாராக இல்லாத நிலையில் தி.மு.க.வின் பயணமானது ஒட்டுமொத்த திராவிடத்தின் குத்தகைதாரர் எனவும் தி.மு.க.மட்டுமே திராவிட கட்சி என்கிற தமிழ்நாட்டின் கட்டமைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு அகில இந்திய அளவிற்கு திராவிடமா இந்துத்துவமா என்கிற அளவில் கொள்கை ரீதியாக அவர்கள் கட்டமைக்கிறார்கள் .
பா.ஜ.க. தமிழ்நாட்டில் தி.மு.க.வை எதிர்ப்பதாகவும் திரு.அண்ணாமலையின் அறிக்கையின் படி அ.தி.மு.க வை அளித்து 2026இல் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்கின்ற பெயரில் தி.மு.க.வை வளர்த்து விடுகிறார்கள். தற்பொழுது இந்தியா முழுவதும் உள்ள எதிர் காட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் திரு. ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இதனை பா.ஜ.க.வின் கோணத்தில் பார்க்கும்பொழுது அ.தி.மு.க வை பலம் குன்ற பல கூறுகளாக்கும் நிலையில் பா.ஜ.க வைத் தவிர்த்து தி.மு.க.பலம் பெற்று திரு.ஸ்டாலின் அவர்கள் ஒரு தேசிய தலைவராக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே அ.தி.மு.க எந்த அளவு வலிமையாக இருக்கிறதோ பா.ஜ.க.வின் அணைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: