கமிஷன் தராததால் புல்டோசரில் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்ட சாலை.


உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கமிஷன் தரவில்லை என்பதற்காக அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததார் அளித்த புகாரின் பேரின் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவாகரம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்த நிலையில், உடனடியாக சாலையை தேசம் செய்தவரிகளிடம் முழு செலவுக்கான தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார்.

உத்தரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறையினர் ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வருகிறார்கள். இந்த சாலையை அமைத்து வரும் ஒப்பந்ததாரரிடம், பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஐந்து சதவீத கமிஷன் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் என கூறிக்கொண்ட நபர்களுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் தரவில்லையாம். ஆத்திரம் அடைந்த ஜக்வீர் சிங் உள்ளிட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் திடீரென புல்டோசரை கொண்டு வந்த புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை பெயர்த்து எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து சாலையை சேதப்படுத்தியவர்கள் பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவர்களிடம் இருந்து புதிய சாலை அமைக்க ஆகும் முழு தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார்.

பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் கடந்த அக்டோபர் 3ம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் ஜக்வீர் சிங் தலைமையில் சுமார் 20 பேர், கமிஷன் தரவில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 2ம் தேதி புல்டோசர் மூலம் சாலையை தோண்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றார்.

சப் கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். விசாரணை அமைப்பின் அறிக்கைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Share on:

இனி சட்டவிரோதமாக பேனர் வைத்தால் பெரும் சிக்கல்..


சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அரசு தரப்பில் கூறப்படுவதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் கல்வெட்டு புறக்கணிப்பு!


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் கல்வெட்டுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன

கோவை தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சரஸ்வதி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அரசு பாடலாக பிரகடனம் செய்திருந்தும் இந்த நிகழ்ச்சியில் அப்பாடல் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டது. வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கல்வெட்டுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த கல்வெட்டுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளையில் தமிழ் கல்வெட்டு வைக்கப்படவில்லை. இது சர்ச்சையாக வெடித்தது. கடந்த ஆண்டும் கோவை நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், வங்கியில் கல்வெட்டுகளைத் திறந்து வைத்த உடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அதிகாரிகளை அழைத்து எந்த ஊரில் நீங்கள் கிளைகள் திறந்தாலும் அந்த ஊர் மொழியில் கல்வெட்டுகள் வைக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் முன்னிலையிதான் கூறினார்.

கல்லூரியின் நிகழ்ச்சி நிரல் எனக்கு முன்னரே தெரியாது. நிகழ்ச்சி தொடங்கிய பின்னர்தான் எங்களுக்கு தெரியும். நிகழ்ச்சியில் நேரடியாக கலந்ததால் ஒருவேளை எனக்கு டக்கென தோணலை. நீங்க சொன்னதுக்கு பிறகுதான் தோணுது.. ஏனெனில் நிறைய புரோகிராம் காலையில் இருந்து..எந்த புரோகிராமில் என்ன பாடினாங்கன்னு கொஞ்சம் தெரியலை என்றார்.
Share on:

40 தொகுதிகளிலும் வென்று யார் பிரதமர் என்று நாங்கள் நிர்ணயம் செய்வோம்” என்ற பிரச்சாரம் கை கொடுக்குமா அதிமுக?


பாராளுமன்ற என்பது மோடி பிரதமராக வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று தீர்மானிக்க. இதில் அதிமுகவிற்கு “40 தொகுதிகளிலும் வென்று யார் பிரதமர் என்று நாங்கள் நிர்ணயம் செய்வோம்” என்ற பிரச்சாரம் கை கொடுக்குமா மாறாக எதுமே இல்லமால் பிஜு பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி போல என்றால் மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதாகிவிடும் அல்லவா? இது பாஜகவிற்கு “B Team” போல் செயல்படுவதாகிவிடும்.

இந்த நிலைப்பாட்டை “மோடி மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கிற தந்திரம்” என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் அதிமுகவிற்கு பாஜக எதிர்ப்பு வாக்குகளும் திமுக எதிர்ப்பு வாக்குகளும் முக்கியம்.இவற்றை கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாக யாரும் உள்நோக்கம் கற்பிக்காத வகையில் முன்வைக்க வேண்டும் – கே.சி.பழனிசாமி
Share on:

பிடி கொடுக்காத அதிமுக.. அடுத்து என்ன? அமித்ஷா, ஜேபி நட்டாவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

டெல்லி: பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. வரும் 2024 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்தது. அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும் இதற்கு அதிமுக பிடி கொடுக்க மறுப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிமுக குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டார். டெல்லி செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணமாலை, தமிழக பாஜக தலைவர் என்பது வெங்காயம் போன்றது என பரபரப்பாக பேட்டி…

Share on:

Continue Reading

முஸ்லிம் வாக்குகளை அதிமுக மீண்டும் பெறுவது எப்படி?


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இறுக்கமான நெருக்கத்தில் இருந்தது அதிமுக. பாஜகவின் இன்னொரு கிளை அமைப்பு போலத்தான் அதிமுக செயல்பட்டு வந்தது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.

அதிமுகவுக்குள் பிரச்சனை என்றால் ஏதோ ஒரு மாநில பிரிவு போல டெல்லி பாஜக தலைமையிடம் போய் புகார் சொல்லி தீர்வுக்கு காத்திருக்கிற நிலைமையில்தான் அக்கட்சித் தலைவர்கள் இருந்தனர் என்பதும் கடந்த கால வரலாறு.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என தமிழாடு பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியதுதான் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது. பெரும் போராட்டத்துக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைபற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவின் இந்த நிலைப்பாடு கொஞ்சமும் சகிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனால் இனியும் பாஜகவின் கூட்டணி தேவையே இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டது அதிமுக.

2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களை பாஜகவுடன் இணைந்தே அதிமுக சந்தித்தது. இதனால் இயல்பாகவே இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிமுகவுக்கு கொஞ்சமும் கூட விழவில்லை. இப்போது பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஆனாலும் இஸ்லாமியர்களை உடனே அதிமுக பக்கம் திருப்பிவிட முடியாது.

அதிமுக ஆதரவு முஸ்லிம் கட்சிகள் எண்ணிக்கையை கிடுகிடுவென அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாம். குறிப்பாக இஸ்லாமிய சிறைக் கைதிகள் விவகாரத்தை முன்வைத்து திமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ப்ளான் போடுகிறதாம் அதிமுக. அப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் போது கணிசமான முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் தம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆபரேஷன் “M” என்று சொல்லுமளவிற்கு முஸ்லிம்களை டார்கெட் செய்து படுவேகமாக காய் நகர்த்துகிறதாம் அதிமுக.
Share on:

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் சிக்கல்?


அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகிகள் பலரிடம் கருத்துகளைக் கேட்டு விரிவான ரிப்போர்ட்டை டெல்லி தலைமைக்கு சமர்ப்பித்துள்ளார் நிர்மலா.

பாஜக கூட்டணியில் இனி அதிமுக இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவறாக பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக தரப்பில் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றனர்.

அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி முறிவால், அடுத்தகட்ட பிளான் தொடர்பாக அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது

ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க அண்ணாமலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை சந்தித்து, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும், அதிமுக வெளியேறிய நிலையில், யாருடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பிறகு, அண்ணாமலை முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொள்வதால், அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது. அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன், டெல்லி மேலிட தலைவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரிடமும் கருத்துகளை கேட்டு அதனை நிர்மலா சீதாராமன் அறிக்கையாக தயார் செய்துள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு, பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி விரிவான அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

பாஜக கூட்டணியை அதிமுக உதறியது சரிதானா?


பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நல்ல  முடிவு .இந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு .ஒருவேளை உறுதியாக இல்லாமல் மீண்டும் பாஜக கூட்டணியை தேடி சென்றால் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் .அதை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.

பாஜகவை பொருத்தவரை அதிமுகவை தங்கள் பக்க, கொண்டு வர சகல அஸ்த்திரங்களையும் பயன்படுத்தும் .ஏக்நாத் ஷிண்டேக்களை உருவாக்குவார்கள் .அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தது போல அதிமுக தலைவர்கள்   பலரது வீடுகளில் ரெய்டு நடக்கும் .இதை தண்டி கட்சியை உடைக்க பார்ப்பார்கள்.தேர்தல் ஆணையத்தின் மூலம் நெருக்கடி கொடுப்பார்கள் .எனவே 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை அதிமுகவுக்கு சோதனை காலம்தான் .அதை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

2014ல் பாஜக தனித்து ஒரு அணியை உருவாக்கியது போல் இப்போது உருவாக்க முடியாது .அப்போது மோடி பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார் .எனவே அவர் மீது பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இல்லை .ஆனால் இப்போது அப்படி இல்லை .ஓ பி எஸ் ,தினகரன் ,சசிகலா மற்றும் பா ம க ஆகியோரை சேர்த்துக்கொண்டு சாதி கூட்டணி வேண்டுமானால் அமைக்கலாம் .மூன்றாவது அணியாக நோட்டாவுடன் போட்டி போடலாம் .தமிழகத்தை பொறுத்தவற்றி வின்னர் .ரன்னர் மட்டுமே வாக்குகளை வாங்குவார்கள் .மூன்றாவதாக ஒருவர் வாக்குகளை வாங்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.

OPS எப்போதுமே பாஜகவின் தீவிர விசுவாசிதான் .அவர் எந்த காலத்திலும் தனியாக கட்சி தொடங்கமாட்டார் .பாஜவுக்கு துணையாக இருப்பார் .ஒரு கட்டத்தில் பாஜகவில் சேர்ந்துவிடுவார் .அவரது எதிர்காலத்தை பாஜகதான் தீர்மானிக்கும் .அதேசமயம் பாஜவை எதிர்க்கும் துணிவு ஓ பி எஸ் ,தினகரன் ,சசிகலா ஆகியோரிடம் இல்லை.

மத்திய அரசு மாநில அரசு இரண்டையும் எதிர்த்து தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது .தேர்தல் காலத்தில் சகல ஆயுதங்களையும் அவர்கள் பிரயோகிப்பார்கள் .எனவே அதிமுகவில் பிரிந்திருப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் .ஓ பி எஸ் ,சசிகலா,தினகரனை நான் சொல்லவில்லை .என்னை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இழந்த வாக்குகள் மீண்டும் அதிமுகவை நோக்கி வரும் .அது மட்டுமல்ல .திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளும் அதிமுகவுக்கு விழும்.

கட்சி தொண்டர்களால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் .ஏனெனில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவில் இன்னொரு எம் ஜி ஆரோ .ஜெயலலிதாவோ இல்லை.பல கோணங்களில் பல வலிமையுள்ள தலைவர்கள் ஒன்றுகூடி பயணித்தால் ,முயற்சித்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் .எடப்பாடியால் அனைத்தையும் செய்ய முடியுமா என்றால் முடியாது .எனவே அனைத்து தரப்பின் பலத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்னுடைய நிலைப்பாடு – K.C.Palanisamy
Share on:

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு!விஷமிகள் செய்த வேலை!


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவிக்கப்பட்டது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டுச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பாஜக கூட்டணி அண்மையில் முறிந்துள்ளது. பேரறிஞர் அண்ணா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எம்ஜிஆர் சிலையில் போடப்பட்டிருந்த காவி துண்டை போலீசார் அகற்றினர். தொடர்ந்து காவல்துறையினர் காவி துண்டை போட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share on:

கோவில் நிலத்தை அபகரித்த பாஜக எம்.எல்.ஏ-க்கள்?


புதுச்சேரியில் கோவில் நிலத்தை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபணமானால், சம்பந்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை என அம்மாநில அரசுத் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது

புதுச்சேரியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்துக்கு போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டு உள்ளதாகவு, இது சம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி கோவில் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இரு பாஜக எம்.எல்.ஏக்கள் தரப்பிலும், தாங்கள் அப்பாவிகள் என்றும் எந்த குற்றத்திலும் தாங்கள் ஈடுபடவில்லை என்றும், குறிப்பிட்ட அந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என நிரூபித்தால் கோவில் நிர்வாகத்திடம் அதை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்கள்.

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, கோவில் சொத்து தனியாருக்கு விற்கப்பட்டதில் அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். குற்றம்சாட்டபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம், புதுச்சேரி அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை சுட்டிக்காட்டி, விசாரணையை தொடர உத்தரவு பிறப்பித்தார்.

பொது சொத்தான கோவில் சொத்தை, பாதுகாக்க வேண்டியது எம்.எல்.ஏக்களின் கடமையும் கூட என்பதால் உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 6வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Share on: