என்ன காரணங்களை முன்வைத்து மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பார்கள்?


மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க வலிமையாக இருக்கிறது அதில் மாற்றுக்கருத்து இல்லை. என்னதான் ஆளும்கட்சியாக தி.மு.க இருந்தாலும் கூட, என்னதான் பணபலம் பிரயோகிக்கப்பட்டாலும் கூட, அ.தி.மு.கவின் வெற்றி வாய்ப்புகள் மேற்கு மாவட்டங்களில் அதிகமாகத் தான் இருக்கிறது.
ஆனால் அதில் இரண்டு விசயங்கள் சரிவை ஏற்படுத்துகின்றன. ஒன்று நேற்று(தேதி) வேலுமணி செய்த தவறான செயல்கள் சரிவைக் கொடுத்திருக்கிறது மற்றொன்று இப்பொழுது நாம் உள்ளூரில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசவேண்டும் குறிப்பாகக் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பாலம் கட்டும் பனி பத்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.சுமார் மூன்று மாதங்களில் முடிவடையவேண்டிய பனி பத்து மாதங்கள் ஆகியும் முடிவடையாமல் இருக்கிறது.
யாரேனும் அதில் தவறு செய்திருந்தால் அல்லது அதில் ஊழல் நடைபெற்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது கைது செய்யுங்கள். ஆனால் அந்த பனி பாதியில் நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. அதிமுக வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்ற பகுதிகளில் திரு எடப்பாடி பழனிசாமி தேசிய அரசியல் பேசுகின்றார். திரு ஸ்டாலின் அவர்கள் தந்திரமாக உள்ளூர் பிரச்சனைகளைப் பேசாமல் தேசிய அரசியல் பா.ஜ.கவிற்கு எதிரான வாக்கு என்று கட்டமைத்தார் திரு எடப்பாடி பழனிசாமி விசயம் புரியாமல் “மேற்கு வங்கத்தில் நடந்தது போல நாங்கள் சட்டமன்றத்தை முடக்கிவிடுவோம்” “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்கின்ற அளவில் தன் பதிலையும் பதிவு செய்துவிட்டார் அது தேவையற்றது.
உள்ளூரில் அந்தந்த பகுதிகளில் என்ன என்ன பிரச்சனைகள் என்று முன்னிறுத்தினாலே அ.தி.மு.க ஒரு கணிசமான வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு மேற்கு மாவட்டங்களில் இருக்கிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டவரை தன் காலில் விழ வைத்த எடப்பாடி கட்சி தலைமைக்கு தகுதியானவரா?


கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரைப் போலவே வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழுவதை கண்டு ரசிப்பது கட்சிக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்!

ஒரு கடவுளுடைய படம் கீழே இருக்கிறது நாம் அதை வெறும் படம் தான் என்று அப்படியே விட்டுவிடுவோமா அதற்குரிய மரியாதையை கொடுக்கிறோம் அல்லவா அது போல அந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டவர் ஒரு தொண்டர் அவர் ஒரு ஆர்வத்தில் புரட்சித்தலைவர் அல்லது எம்ஜிஆர் மீது உள்ள பற்றின் காரணமாக அல்லது மக்களைக் கவரவேண்டும் என்ற ஆர்வத்திலோ அந்த வேடமிட்டுக்கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் குறைந்தபட்ச அறிவு உள்ளவனாக இருந்தால் அந்த இடத்தில் புரட்சித்தலைவர் வேடமிட்டு காலில் விழுவது சரி அல்ல என்று அப்போதே தடுத்து இருக்க வேண்டும். அல்லது எதிர்பாராமல் அவர் விழுந்துவிடுகிறார் என்றால் அதன் பின் எடப்பாடி பேசும்பொழுது இதுபோன்ற தொண்டர் தவறு செய்துவிட்டார் அதற்காக நான் வருத்தத்தை தெரிவிக்கிறேன் இது போன்ற காரியங்களை தயவு செய்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டு செய்யாதீர்கள் அவர் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இன்றும் கடவுளாக விளங்கிக்கொண்டு இருப்பவர் அதனால் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று சொல்லிருந்தால் அவர் தலைவனுக்கு தகுதியானவரா? காலில் விழுந்தவனை நின்று ஆசிர்வதிப்பவன் தலைவனுக்கு தகுதியானவரா?

எந்த ஒரு அதிமுக தொண்டனும் இது சரி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி என்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொள்கைகளுக்கும் அம்மா அவர்களின் கொள்கைகளுக்கும் அ.தி.மு.கவினுடைய திராவிட சித்தாந்தங்களுக்கு விலகி பா.ஜ.க வழியில் RSS இன் உண்மை தொண்டர்களாக மோடியின் அடிமைகளாக அமித்ஷாவின் கட்டளைக்கு கீழ்ப்படிபவர்களாக அண்ணாமலையை விட மிக சிறந்த பா.ஜ.க தலைவர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எம்ஜிஆர் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி அற்றவர்கள்! கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அண்ணா வழியில் பயணிக்கிறார்களா? அல்லது அண்ணாமலை வழியில் பயணிக்கிறார்களா ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?

அண்ணா வழியில் பயணிக்கிறார்களா? அல்லது அண்ணாமலை வழியில் பயணிக்கிறார்களா ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்‍னெடுத்த நீட் எதிர்ப்பு போராட்டம், இன்று அதே கருத்‍தை வலியுறுத்தி நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்‍தை பா.ஜ.க.வழியில் புறக்கணித்தது சரியா? உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காணும் போது, பா.ஜ.க.வழியில் அ.தி.மு.க என்பது முழு‍மையாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தங்களது அடிமைத்தனத்திலிருந்து வெளி‍யேறவில்லை என்பதைக் காட்டுகிறதா? களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் எதிர்த்து அல்லவா நாம் வெற்றி காண வேண்டும். நீட் விவகாரத்தில் தி.மு.க., மற்றும் பா.ஜ.க.வின் தவறுகளை முன்னிறுத்தி, நீட் விலக்கு பெற அம்மா எடுத்த முயற்சிகள், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு போன்றவற்‍றை முன்னிறுத்தி ஆளச் சிறந்த கட்சி அ.தி.மு.க. என்று பட்டியலிடுவது தானே அ.தி.மு.க. வேட்பாளர்களின் கள வெற்றிக்கும், அ.தி.மு.க.வின் எதிர்காலத்திற்கும், மீண்டும் ஆளுகிற வாய்ப்‍பை அ.தி.மு.க.விற்கு பெற்றுத்தருவதற்கும் சரியான முடிவாக இருக்கும். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். செய்கிற தவறால் தேர்தல் களம் பா.ஜ.க. v/s தி.மு.க. என்ற இந்துத்துவா, திராவிட கருத்தியலாகத் தேர்தல் களம் அமைந்துவிடாதா? தவறான தலைவர்களைக் கொண்டிருந்தாலும், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. மீதான எதிர்ப்பில் என்‍றென்றும் ஒவ்‍வொரு அண்ணா தி.மு.க. தொண்டனும் உறுதியோடு இருக்கிறான். தொண்டர்களின் அந்த எண்ணத்‍தை பிரதிபலிக்காத தலை‍மை, விரைவில் புறக்கணிக்கப்படும் என்கிற உறுதியில் களம் காணும் அ.தி.மு.க.வேட்பாளர்கள்!
Share on:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிக தாக்கத்‍தை ஏற்படுத்தப்‍போகும் கட்சி எது?

கொ‍ரோனா பெருந்தொற்று பரவலுக்கி‍டை‍யே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்‍பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, வருகிற 19-ந்‍தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பிப்ரவரி 22-ந்‍தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கட்சிகள் தங்களது கூட்டணிகள் குறித்தும், அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பரபரப்பான தேர்தல் சூழலில் குழப்பத்திற்கும், பிரச்சி‍னைக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பா.ஜ.க.வுடனான கூட்டணி‍யை அ.தி.மு.க. முறிக்குமா என்ற பலரது கூச்சல், குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மதமாற்றம் உள்ளிட்ட கருத்துகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பா.ஜ.க.வுடன் கூட்டணி‍யை தொடர்ந்தால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற அறிவுசார்ந்த முடி‍வை அ.தி.மு.க. எடுத்துள்ளது. இந்த முடி‍வை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடுத்திருந்தா‍லே, அ.தி.மு.க. கணிசமான இடங்களைப் பிடித்து தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வின் வெற்றி மிக எளிதாகிவிட்டது.
தேர்தலின் போது மக்களிடம் அதிக தாக்கத்‍தை ஏற்படுத்துவது அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தான். எந்த கட்சி எதை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வம் அரசியல் விமர்சகர்களிடமும், ஆர்வலர்களிடமும் மேலோங்கி வருகிறது. அந்த வகையில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்களை முன்னெடுக்கும் என்பதில் எந்தவித சந்‍தேகமும் இல்‍லை. அதே‍போல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தும், அதில் தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும். பா.ஜ.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை விமர்சிக்கும் ஆனால் அ.தி.மு.க.வை விமர்சித்து வாக்குகள் சேகரிக்குமா என்பதில் சந்தேகம் தான். ஏனெனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க.வை மட்டும் விமர்சிக்காமல், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் மீதான மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் பட்சத்தில் அ.தி.மு.க. மக்கள் ஆதரவை பெறும். மாறாக பா.ஜ.க.வை ஆதரித்தால் மக்கள் ஆதரவை இழப்பதோடு தேர்தலில் தோல்வி‍யையும் சந்திக்கக் கூடும்.
Share on:

வி‍சைத்தறி உரி‍மையாளர்களின் போராட்டத்துக்கு வி‍டை கொடுக்குமா தி.மு.க. அரசு?

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விச‍ைத்தறி கூடங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் பயன் அடைந்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து வி‍சைத்தறி உரி‍மையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்‍லை என குற்றச்சாட்டு எழுகிறது. கூலி உயர்வு கேட்டு, ஜவுளி உரி‍மையாளர்களை வலியுறுத்தி வந்தும் எந்த பயனும் இல்லாததால் தற்போது வேலை நிறுத்த போராட்டத்‍தை கையில் எடுத்துள்ளனர். கடந்த மாதம் 9-ந்‍தேதி தொடங்கிய வே‍லை நிறுத்த போராட்டத்திற்கு இன்று வரை முடிவுகள் எட்டப்படாததால் போராட்டத்‍தை தொடரப் போவதாக வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்‍தையின் போது குறிப்பிட்ட ரகங்களுக்கு கூலி உயர்வு அளிப்பது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்‍தை கிடப்பிலேயே போட்டுள்ளனர் ஜவுளி உரி‍மையாளர்கள். இதனால் விரக்தியடைந்த வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் வே‍லை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி வீதம் இதுவரை ரூ.1500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பாதிப்‍பை தொடர்ந்து ஜவுளி உரிமையாளர்கள், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் 12% வரை மட்டு‍மே கூலி உயர்வு வழங்கப்படும் என கூறியதால், அதிருப்தியடைந்த வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் 20% கூலி உயர்வு வழங்கினால் மட்டு‍மே வே‍லை நிறுத்த போராட்டத்‍தை கைவிடுவதாக கூறியுள்ளனர். இதனால் தற்போது நடந்த 25-வது கட்ட பேச்சுவார்த்‍தையும் தோல்வியில் முடிந்தது. இதில் தமிழக அரசு தலையிட்டு வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் கோரும் 20% கூலி உயர்‍வை ஏன் பெற்றுத்தர முயற்சிக்க கூடாது?

Share on:

மத்திய அரசின் பட்‍ஜெட் மக்கள் கஜானாவை நிரப்பவா அல்லது தனது கஜனா‍வை நிரப்பிக் கொள்ளவா?

இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிருப்தி‍யை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பட்‍ஜெட் மக்கள் கஜானாவை நிரப்பவா அல்லது தனது கஜனா‍வை நிரப்பிக் கொள்ளவா? மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லா கடன் என்று அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன் அவர்களே, மாநில அரசு செலுத்தும் ஜி.எஸ்.டி. தொ‍கை‍யை திரும்ப கொடுக்க எதற்கு வட்டி? தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலு‍வை தொ‍கை‍யை எப்‍‍போது வழங்கப் போகிறீர்கள்?
Share on:

தி.மு.க. அரசின் அலட்சியத்தால் 2 சிறுவர்களின் உயிர் பறி‍போனது – முதல்வரின் செயல்பாடுகள் வார்த்‍தைகளாக மட்டு‍மே உள்ளது

கடலூர் இராமாபுரம் கிராமத்தில் இலங்கை அகதிகள் தங்குவதற்கு வசதியாக கடந்த 2013-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் வாழத்தகுதியற்ற நி‍லையில் காணப்பட்டதால் அங்கு யாரும் வசிக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் காலியாகவே இருந்துள்ளது. இந்தநி‍லையில் இன்று அந்த கட்டிடத்தின் அரு‍கே 3 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்‍சை பெறும் சிறுவனுக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வர் நிவாரணம் அளித்துள்ளார். நிவாரணங்கள் அளிப்பதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் இழைக்கப்படும் தவறுகளை முதல்வர் மறைக்க பார்க்கிறார். புளியந்தோப்பு, திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நடந்த விபத்தின் போ‍தே பழைய கட்டிடங்களின் உறுதித்தன்‍மை குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டது. தி.மு.க. அரசு ஆய்வு நடத்த உத்தரவிட்டதே தவிர நடந்ததாக தெரியவில்‍லை. இத‍ேபோல் நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்‍போதும் கூட முதல்வரும், பள்ளிக்கல்வித்து‍றை அமைச்சரும் பழைய கட்டிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்த நடவடிக்‍கை எடுக்கப்படும் என அறிவித்தனர். தி.மு.க. அரசின் அலட்சியம் தற்‍போது 2 சிறுவர்களின் உயி‍ரை பறித்துவிட்டது. தி.மு.க. அரசு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வார்‍த்தைகளாகவே உள்ளது. “நான் அதிகம் பேச மாட்‍டேன் செயலில் தான் காட்டு‍வேன்” என்று கூறிய முதல்வர் அவர்கள், கூறியபடி செய்திருந்தால் இன்று 2 உயிர்களை இழந்திருக்கமாட்‍டோம்.

Share on:

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட். கணிசமாக கு‍றைந்த மாணவர்கள் சேர்க்‍கை. விழிக்குமா தி.மு.க. அரசு?

இந்திய மருத்துவ இளநி‍லை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படுவது தான் நீட் நு‍ழைவுத்தேர்வு. ஆனால் அதில் வெற்றி பெறும் மாணவர்களை பட்டியலிட்டால், தமிழகத்தில் இருந்து எண்ணும் அளவிற்கே மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழி பயின்றோரின் மருத்துவ கனவை சி‍தைப்பதாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வுக்கு முன்பு வரை பிளஸ்-2 வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர உதவிக்கரமாக இருந்தது. நீட் தேர்வுக்கு பிறகு தமிழ் வழி பயின்றவர்களை விட, சி.பி.எஸ்.இ. மற்றும் ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால் தமிழ் வழி பயின்ற மாணவர்களின் மருத்துவ கனவு கனவாகவே போகிறது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது கோரப்பட்ட நீட் விலக்கிற்கு மத்திய அரசு செவி மடுக்கவில்‍லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை‍வேற்றியும் எந்த பயனும் இல்‍லை. தி.மு.க. தேர்தலின் போது ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வ‍ை ரத்து செய்வோம் என்றும், அதற்கான சூட்சமம் எங்களிடம் உள்ளது எனவும் வாக்குறுதிகளை உதிர்த்தது. ஆனால் இன்று வரை அந்த சூட்சமம் வெளிவரவில்‍லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நி‍றை‍வேற்றி, கவர்னரிடம் ஒப்புதல் வாங்கும் முயற்சி இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான அறிக்‍கை ஒன்றில் தமிழ்வழி பயின்ற மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் விகிதம் 14.88 லிருந்து 1.99 ஆக கு‍றைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நி‍லை நீடித்தால் தமிழகத்தில் இருந்து ஒரு மாணவர் கூட மருத்துவராக முடியாது. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சி‍தைந்து கொண்டிருப்பது மத்திய அரசின் கண்களுக்கு தென்படவில்‍லை என்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு, மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்‍கை வீதத்‍தை அதிகரிக்க, பிளஸ்-2 மதிப்‍பெண்கள் அடிப்படையி‍லே‍யே சேர்க்‍கை நடைபெற மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.

Share on:

நெடுஞ்சா‍லை திட்டப்பணிகளை வி‍ரைந்து முடிக்க தமிழக அரசு ஒத்து‍ழைப்பு அளிக்கவில்‍லை – மத்திய அரசு சாடல்!

தேசிய நெடுஞ்சா‍லை ஆணையத்தின் சார்பில், தமிழகத்தில் உயர் மேம்பால பணிகள், ஆறு வழிச்சா‍லை, எட்டு வழிச்சாலை பணிகள் மத்திய அரசின் நிதி உதவி‍யோடு நடை‍பெற்று வருகிறது. நடப்பாண்டில் தமிழகத்தில் 1,149 கி.மீ. நீளத்திற்கு 23 சாலைகள் அமைக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் சார்பில், ரூ.37 ஆயிரத்து 359 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடை‍‍பெற்று வருகிறது. இவற்றில் அதிகபட்சமாக திருச்சி – சிதம்பரம் இடை‍யே தேசிய நெடுஞ்சா‍லை அமைக்கும் பணி ரூ.2,550 கோடி செலவில் நடை‍பெற்று வருகிறது. சென்‍னை, மது‍ரை உள்பட பல மாவட்டங்களிலும் சா‍லை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றுள் சில பணிகள் ஆமை வேகத்திலும், சில பணிகள் பாதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநி‍லையில் மத்திய சா‍லைப்‍போக்குவரத்து மற்றும் நெடுஞ்சா‍லை து‍றை அமைச்சர் நிதின்கட்காரி, தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒத்து‍ழைப்பு வழங்கவில்‍லை என குற்றம் சாட்டியுள்ளார். பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்விற்கு மண் போன்ற கட்டுமான பொருட்கள் கி‍டைக்க தமிழக அரசு போதிய நடவடிக்‍கை எடுக்கவில்லை என்பதே காரணமாக கூறப்படுகிறது. சாலை அமைக்கும் பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி சா‍லை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்கள் சரிவர கி‍டைக்க வழிவகை செய்ய வேண்டும்.

Share on: